Author: admin
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் – பொன்சேகா
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – சிவ பூஜையில் புகுந்த கரடி என அமைச்சர் விசனம்
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ... Read More
இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது தாக்குதல் – 23 பேர் பலி
இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 07 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஐ.நாவின் குரலை உலகம் கண்டுகொள்ளவில்லையென ஐ.நா ... Read More
பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார். அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை ... Read More
12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் அம்பாறை மற்றும் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 48 சதமாக ... Read More
திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
ஒரு இலட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் (26.03.2025) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி
தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அவரது ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 17 ... Read More
இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நாளை மறுதினம்
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 06 அவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் , இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ... Read More
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இன்றைய தினம் முதலாவதாக இடம்பெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ... Read More












