போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.

இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடைந்துவிட்ட நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வன்முறையைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போரைத் தொடர்வதால் இனிமேல் சாதிக்க வேண்டியது ஏதுமில்லை என்பதே அவரது முக்கியக் கருத்தாக உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )