
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு லெபனானில் உள்ள கட்டளை மையங்கள் மீது தனது விமானப்படை மற்றும் கடற்படை
நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
