ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்தடைந்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இன்று (23) கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், இன்று பிற்பகல் (23) ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட செயல்பாடுகள் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக நாளை அவர், கேகாலை மாவட்டத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாளை பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )