அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்குகளில் வரவு

அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற பயனாளர்களின் ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளர்களில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 548 குடும்பங்களுக்கு உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பயனாளர்கள் நாளை முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.