
கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
கைதான தமிழக மீனவர்கள் 10 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் இன்று (13) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டது.
CATEGORIES இலங்கை
