பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை புனரமைக்க நடவடிக்கை

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை புனரமைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபை முதல்வரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நல்ல போக்குவரத்தை ஏற்படுத்த அதிக காலம் எடுத்தாலும் மக்களின் உயிரைப் பாதுகாக்க அவ்வளவு அதிக காலம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க,

“நமது நாட்டில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அதிக அளவில் உள்ளன.

இன்றும் கூட, அளுத்கம பகுதியில் ஒரு முச்சக்கர வண்டி ஒன்று மோதியுள்ளது.

400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளன.

எனவே, எதிர்வரும் மாதத்திற்குள், இலங்கையில் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் அனைத்து ரயில் கடவைகளையும், சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்று நம்புகிறோம்.

அது நமது பொறுப்பு. “நல்ல போக்குவரத்தை உருவாக்க நேரம் எடுத்தாலும், மக்களின் உயிரைப் பாதுகாக்க அவ்வளவு நேரம் எடுக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This