திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்

திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்

மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவன் இதே பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரத்தில் கற்கும் மாணவனை தாக்கி சவர அலகால் கழுத்தை அறுத்துள்ளார்.

படுகாயமடைந்த காயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிட்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவனை தாக்கி காயமேற்படுத்திய மாணவன் தப்பிச்சென்றுள்ளதாக அறிய முடிகின்றது. காதல் விவகாரமே இந்த மோதலுக்கு காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This