மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தென் கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி அவர் இன்று ஆஜராகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதால், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

CATEGORIES
TAGS
Share This