
பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்
மதுராந்தகம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றவுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தில் மாலை 3 மணி முதல் 4.30 வரை பங்கேற்கும் பிரதமர் மாலை 4.30 க்கு ஹெலிகொப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் செல்வார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்பின்னர் மாலை 5.05 க்கு தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
