கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்

கல்விச் சீர்திருத்தங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது – அமைச்சர் திட்டவட்டம்

நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதில் அரசு உறுதியாக இருப்பதை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

நேற்று (18) கிரிபத்கொடவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள் மற்றும் தடைகள் அடையாளம் காணப்பட்டு, அவை முறையாக நிவர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் நவீன மாற்றங்களை உட்புகுத்துவதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என நம்பும் அரசாங்கம், அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும் என அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்திக் கூறினார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )