2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை

2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டியுள்ளோம்.

இந்த ஆண்டில் நாங்கள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைய இலக்கு வைத்துள்ளோம்.

மேலும் 5 பில்லியன் டொலர் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளோம். அது ஒரு சவாலான எண்ணிக்கையாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்த போதும், பின்னர் அது 2.4 மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் சூறாவளி தாக்கம் இருந்தபோதிலும், டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வருகை அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )