தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு

தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு

இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )