இந்தியாவின் அ​சாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்

இந்தியாவின் அ​சாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்

இந்தியாவின் அ​சாம் மாநிலத்​தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் 58 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

ஆங்​லாங் பகு​தி​யில் நேற்று இரண்டாவது நாளாக பெரும் கலவரம் ஏற்​பட்​டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநிலத்​தில் கர்பி (Karbi)பழங்​குடி​யினரின் அமைப்​பு​களின் தன்னாட்சி கவுன்​சில் எல்​லைக்கு உட்​பட்ட, அரசு மேய்ச்​சல் நிலங்களில் பிஹார் மற்​றும் நேபாளத்​தைச் சேர்ந்த பலர் குடியேறி உள்​ளனர்.

அவர்​களை அங்​கிருந்து வெளி​யேற்ற வேண்டும் என கர்பி பழங்​குடி​யினத்​தவர்​கள் நீண்ட கால​மாக வலி​யுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் வன்முறையாக மாறியுள்ளது.

தங்​களது கோரிக்​கைகளை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்​லாங்​கின் பெலங்பி என்ற பகு​தி​யில் கடந்த 2 வாரங்​களாக பழங்​குடி​யினர் 9 பேர் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

அவர்​களின் உடல்​நிலை மோசம் அடைந்​ததை தொடர்ந்து கடந்த திங்​கட்​கிழமை அவர்​களை மருத்​துவ சிகிச்​சைக்​காக பொலி​ஸார் குவாஹாட்டிக்கு அழைத்​துச் சென்​றனர்.

இதனால் கோபம் அடைந்த பழங்​குடி​யினத்​தவர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில், இரண்டாவது நாளாக நேற்று போராட்​டம் நடை​பெற்​றது.

கர்பி பகு​தி​களில் இருந்த வாக​னங்​கள் தீ வைக்கப்பட்டன.மேலும் கற்களை வீசி​யும் தாக்​குதல் நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் கண்​ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )