பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்

பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்

சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் மயூரி பெரேராவால் இந்தப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கையுடனான பங்களாதேஷின் தொடர்ச்சியான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஆண்டலிப் எலியாஸால் இந்தப் பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )