21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்

21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அதேவேளை, குறித்த போராட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

Share This