26ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் மின்தடை

ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
மின்கட்டமைப்பில் அவசியம் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, குறித்த தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாழ். மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.