எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

எல்ல பேருந்து விபத்து – காரணம் வெளியானது

எல்ல – வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழந்து பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், விபத்து தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களித்தின் ஆணையரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயரமான பகுதியில் இருந்து கீழ் நோக்கி பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டிய கியருக்கு பதிலாக, நான்காவது கியரில் பேருந்து பயணித்துள்ளமை விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தின் பின்புற வலது சக்கர அமைப்பில் பிரேக்குகள் முழுமையாக செயற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Share This