மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து சாம்சங் நிர்வாக அதிகாரி விடுதலை

2015ஆம் ஆண்டு இணைப்பு ஒப்பந்தம் தொடர்பான தொடரப்பட்ட வழக்கில், சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜே-யோங்கை அனைத்து மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்தும் தென் கொரிய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாம்சங்கின் நிறுவனரின் பேரனும், 2014 முதல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்த லீ ஜே-யோங், நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக நிறுவனத்தின் பங்குகள் மற்றும் கணக்கியலை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
சியோலில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், அவர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி அல்ல எனக் கண்டறியப்பட்டதுடன், முந்தைய இரண்டு விசாரணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.
இணைப்பு பரிவர்த்தனை அல்லது ஒருங்கிணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கும் ஒரு வணிக பரிவர்த்தனையாகும்.
இரண்டு சாம்சங் துணை நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புக்கு அரசாங்க ஆதரவைப் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லீ முதன்முதலில் 2017 இல் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
மேலும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தனது தந்தை லீ குன்-ஹீயிடமிருந்து மாற்றுவதற்காக ஒரு இணைப்பைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவரது தந்தை 2014 இல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், பின்னர் 2020 இல் இறந்தார்.
இரண்டு சாம்சங் துணை நிறுவனங்களை இணைப்பதற்கு அரசாங்க ஆதரவைப் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இளைய லீ முதன்முதலில் 2017 இல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சாம்சங்கின் சட்டத்தரணிகள் கூறியதாவது:
“இன்று, உச்ச நீதிமன்றம் அதன் இறுதித் தீர்ப்பின் மூலம் சாம்சங் சி&டி மற்றும் சாம்சங் பயோலாஜிக்ஸின் கணக்கியல் செயல்பாடு ஆகியவற்றின் இணைப்பு சட்டபூர்வமானது என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.”
“ஐந்தாண்டு முழு வழக்கு செயல்முறைக்குப் பிறகு நீதிமன்றத்தின் முடிவுக்கு நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம்.” என்றனர்.