பாலஸ்தீனத்தில் ஐ.நா. விசாரணையாளருக்கு அமெரிக்கா தடை விதித்தது

காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியதற்காக, ஒரு முக்கிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த சட்டத்தரணியுமான அல்பானீஸ் மீது டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக “அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக” குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.
தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பின்னர், எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.