தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முன்வைத்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைப்பு

தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முன்வைத்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி எம்.பிக்கள் முன்வைத்த பிரேரணையை, நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முன்மொழிவு நாளை நடைபெறும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு விவாதிக்கப்பட்ட இந்த முன்மொழிவு 5 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற விவாதத்திற்குப் பிறகு, தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த முன்மொழிவு 113 உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விசாரிக்க சபாநாயகரால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும்.

விசாரணைக் குழுவின் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை குறித்து தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் 115 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நேற்று (26) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் அவருக்கு எதிராக 27 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This