மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணம் 30% குறைக்கப்படும்

மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணம் 30% குறைக்கப்படும்

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் ஒரு வருடம் முழுவதும் தேவையான நிலக்கரி இருப்புக்களை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்து கொள்வனவு செய்வதன் ஊடாக நிலக்கரி செலவு குறைப்பின் பலனை பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

ஆண்டுக்குள் ஏற்படும் நிலக்கரி விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மின் கட்டணங்களை நாங்கள் சரிசெய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This