தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின்படி முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதரையில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அவர் வெளியே வரவில்லை என்றால், நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம்.”

தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் சொத்துக்களை முடக்க முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும், அவர் தொடர்பான எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், முன்னதாக, பொலிஸ் மா அதிபர் தென்னகோனை கைது செய்வதைத் தவிர்க்க உதவியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னகோனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அவருக்கு உதவிய எந்தவொரு நபரும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This