அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட முதல் நெல் கையிருப்பு

அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட முதல் நெல் கையிருப்பு

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று (13) மாலை நெல் சந்தைப்படுத்தல் சபையால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் தனது நாட்டு நெல் அறுவடையை விற்று, பெரும்போக பருவத்தின் முதல் நெல் இருப்பை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

குறித்த நெல் கையிருப்பில் 650 கிலோ நெல் காணப்பட்டது.

நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் இருப்பை அம்பாறை திஸ்ஸபுர களஞ்சியசாலைக்கு விற்றது.

இதன்போது, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம, நெல் சந்தைப்படுத்தல் சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் என். எஸ். சேனநாயக்க, மாவட்ட விவசாய பணிப்பாளர் துஷார பெரேரா, களஞ்சியசாலை அதிகாரி பிரியந்த குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This