தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு
![தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/2748302.jpg)
தாய்வானின், தைசங் நகரிலுள்ள ஷின் கோங் மித்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடியொன்று 12 ஆவது தளத்தில் இயங்கி வருகிறது.
இதில் உணவு விற்பனை செய்யும் குறித்த பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அங்குள்ளவர்களை மீட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.