13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை

13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 590,000 ஐத் தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 97,322 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 93,951 சுற்றுலாப் பயணிகளும் ரஷ்யாவிலிருந்து 77,608 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 56,103 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 41,366 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This