இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது.
இந்தத் தகவலை இலங்கை குழந்தைகள் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
“கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குழந்தைகளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்கு முக்கிய காரணங்கள் என்பதை இந்த மனநல ஆய்வு கண்டறிந்துள்ளது” என்று பேராசிரியர் சந்திரதாச கூறினார்.
இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 19 சதவீதத்தினர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டுவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.