கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடினார்.

அப்போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில், சிறுவனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டார் என அங்கு தெரிவிக் கப்பட்டது. இம் மரணம் தொடர்பில் பருத் தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன் தயான் விசாரணை மேற்கொண் டார்.

நெல்லியடி பொலிஸா புலன் விசாரணைகளை மேற்கொண்ட மையுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக் கபட்டது.

CATEGORIES
TAGS
Share This