கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு

கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும்
அவர் கூறியுள்ளார்.

காணாமற்போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 130 பாடசாலைகளும் 97,850 மாணவர்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்திற்கான புள்ளிவிவரங்கள்
தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடம்பெயர்வு முகாம்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )