
3 மாகாணங்களின் 640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு
ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
