ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இவ்வருடம் குறிப்பிட்டளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

மேலும், கடந்த மாதத்தில், இந்தியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், சீனா, ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share This