ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது.

அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உத்தர பிரதேச அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத் பல்​கலைக்கழகம் நடத்​துகிறது.

இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது.

இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன.

மேலும் 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட உள்​ளன. இவற்​றில் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கருத்து வெளியிடுகையில் “அயோத்​தி​யின் வெறும் தீபாவளி திரு​நாள் விழா​வாக அன்றி ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்பட உள்​ளது.

இந்த வருட​மும் தீபாவளிக்கு வரும் வெளி​நாட்​ட​வர்​கள் இடையே இது சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் கலாச்​சா​ரத்தை வெளிப்​படுத்​தும். இதைக் காண வரும் லட்​சக்​கணக்​காக பொது​மக்​களுக்​காக அயோத்​தி​யில் சிறப்பு போக்​கு​வரத்​துடன் பாது​காப்​பு​களும் பலப்​படுத்த உள்​ளன” என்று குறிப்பிட்டார்.

Share This