குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்த போது அவர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த நான்கு பெண் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆபத்தான நிலையில் உள்ள நான்கு பேர் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தேயிலைத் தோட்டத்தில் இருந்த 15 பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This