தலாவ பஸ் விபத்து: உயர்தர மாணவன் பலி: மேலும் நால்வர் கவலைக்கிடம்

தலாவ பஸ் விபத்து: உயர்தர மாணவன் பலி: மேலும் நால்வர் கவலைக்கிடம்

காயமடைந்தவர்களில் 36 பேர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மேலும் 10 பேர் தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

தலாவயில் இருந்து பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர்வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Share This