<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/இந்தியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 01 Jun 2026 06:52:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/இந்தியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</title>
		<link>https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:52:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அரசியல்வாதிகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[எண்ணெய் விலை]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49468</guid>

					<description><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான். உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்&#8221; – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான மேடைப் பேச்சுகள் இவைதான்.</p>
<p>உண்மையாகவே எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தால், இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது பெரும் மகிழ்ச்சிதான். வரிகள் குறைக்கப்பட்டால் அது சாதாரண அடித்தட்டு மக்களுக்குப் பாரியதொரு நிவாரணமாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதைப் பற்றி மீண்டும் நாம் புதிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p>
<p>இந்த நாட்டின் குடிமக்களாகிய நமக்கும் அது புரிகிறது, நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் நமது நாடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் தனித்து வாழும் தீவு அல்ல. நாமும் அந்த உலகளாவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரின் ஓர் அங்கமே. எனவே, சர்வதேச ரீதியாக ஏற்படும் அதிர்வுகள் நம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை நாம் இந்த யதார்த்தமான கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. அதை விடுத்து வெற்று மேடைப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.</p>
<p>சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவும் ஈரானும் தற்போது &#8216;நெருப்பும் நீரும்&#8217; போல மிகக் கடுமையான முரண்பாடுகளுடன் மோதிக்கொள்கின்றன.</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பிராந்திய யுத்தம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த யுத்தம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தாக்கம் நமக்கு மட்டுமல்ல, சுமார் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பை மார்புதட்டி வைத்துள்ள இந்தியா போன்ற பிரமாண்டமான நாடுகளுக்கே இப்போது வலிக்கத் தொடங்கியிருக்கிறது.</p>
<p>டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாம் அறிந்ததே. கடந்த மூன்று வருடங்களின் பின்னர், ஓர் அமெரிக்க டொலருக்கு 350 ரூபாவைச் செலுத்த வேண்டிய அவல நிலை கடந்த வாரம் நேர்ந்தது.</p>
<p>அதேநேரம், 700 பில்லியன் டொலர் கையிருப்பு வைத்துள்ள இந்தியாவின் நாணய மதிப்பும்கூட இந்த மே மாதத்தில் டொலருக்கு நிகராக 97 ரூபா வரை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நம்மிடம் இருப்பதோ வெறும் 7 அல்லது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. ஓர் எண்ணெய் கப்பலைக்கூட வரவழைப்பதற்கு நம்மிடம் 50 மில்லியன் டொலர் கையிருப்பு இல்லாமல், நாடே எரிபொருள் வரிசைகளில் நின்ற கசப்பான கடந்த கால வரலாறு நமக்கு மறந்துவிடக்கூடாது.</p>
<p>இலங்கை மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டொலருக்கு நிகராக ஏன் வீழ்ச்சியடைகின்றன? உலகளாவிய மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் இதற்கு எவ்வாறு காரணமாகின்றன??, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>முதலாவதாக, இந்தியாவும் நம்மைப் போலத்தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரு நாடு. இந்த வளைகுடா யுத்தம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. இப்போதும், இந்த வினாடியிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, எண்ணெய்க்காகச் செலுத்த வேண்டிய டொலரின் அளவு இரு நாடுகளுக்கும் பல மடங்கு அதிகரித்துள்ளது.</p>
<p>இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை விற்றுவிட்டு, அதிக லாபமும் பாதுகாப்பும் தரும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் என்ன நடக்கும்? இந்தியாவிலிருந்து வெளியேறும் இந்த முதலீட்டாளர்கள் உள்நாட்டு ரூபாக்களை விற்றுவிட்டு டொலர்களை வாங்குவார்கள். அப்போது ரூபா இன்னும் பலவீனமடையும். அதாவது மூலதனம் முழுவதும் அமெரிக்கா நோக்கிப் பாய்வது நடக்கிறது.</p>
<p>மறுபுறம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்வது மற்றுமொரு ஆபத்தான அறிகுறியாகும். ஏற்றுமதி வருமானத்தை விட, இறக்குமதிச் செலவு அதிகரிப்பதே வர்த்தகப் பற்றாக்குறையாகும். கடந்த 2023 இல் 4.9 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2024 இல் 6.1 பில்லியன் டொலராக உயர்ந்தது.</p>
<p>கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும், வெளிநாட்டுப் பண அனுப்புதல்களும் சாதனை அளவில் அதிகரித்த போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலராக மேலும் மோசமடைந்தது. இதற்கு 2025 இல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும், நுகர்வுப் பொருட்களுக்கான தேவை எகிறியமையுமே காரணமாகும். ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும், நாம் கொண்டு வரும் பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல மடங்கு அதிகரித்தது.</p>
<p>தற்போது 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், இந்த யுத்தச் சூழலால் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுடன் கப்பல் கட்டணங்களும், காப்புறுதிச் செலவுகளும் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டன. இந்தத் தருணத்தில், ரூபா வீழ்ச்சியைத் தடுக்கவும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாம் எதைச் செய்தாலும் வெளிநாட்டுக் கையிருப்பை, அதாவது டொலரின் அளவை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையென்றால், எண்ணெய்க் கப்பல் ஒன்றைக்கூடக் கொண்டுவருவதற்கு 50 மில்லியன் டொலர் இல்லாமல் மக்கள் வரிசைகளில் நின்ற அதே பழைய நிலைமை மீண்டும் உருவாகிவிடும்.</p>
<p>எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வெறும் கூச்சல்களைப் போட்டுக் கொண்டிருக்காமல், உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு, குறைந்தது இந்த மத்திய கிழக்கு யுத்தம் முடியும் வரையிலாவது எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றிப் பேச வேண்டும். அதுவரை, குடிமக்களாகிய நாம் எரிபொருள் நுகர்வைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும்.</p>
<p>முடிந்தவரை பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் பரிமாறிக்கொள்ளும் சோற்றுத் தட்டில் ஒரு சோற்றுப் பருக்கையையேனும் குப்பைத் தொட்டியில் போடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.</p>
<p>வர்த்தகப் பற்றாக்குறைத் தரவுப்பட்டியல்</p>
<p>2023 ஆம் ஆண்டு: 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2024 ஆம் ஆண்டு: 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</p>
<p>2025 ஆம் ஆண்டு: 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் விளைவு)</p>
<p>குறிப்பு: 2026 ஆம் ஆண்டின் தற்போதைய உலகச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகக் கப்பல் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை இலங்கையின் பொருளாதார மீட்சிக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.</p>
<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/stop-the-rhetoric-sri-lanka-warned-of-2022-style-crisis-amid-global-war-and-rising-trade-deficit/">உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும்  இலங்கையினது களநிலை யதார்த்தமும்  வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</title>
		<link>https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 13:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49280</guid>

					<description><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன. பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார். அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.</p>
<p>அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.</p>
<p>இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால சிலைகள், புராதன பொருட்​கள் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்​தப்​பட்டிருந்தன.</p>
<p>பிரதமர் நரேந்​திர மோடி வெளி​நாடு​களுக்கு பயணம் மேற்​கொள்​ளும்​போது, பழங்​கால அரிய பொருட்​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கு​மாறு குறித்த நாடு​களின் அரசுகளிடம் வலி​யுறுத்தி வந்திருந்தார்.</p>
<p>அதன் பிரகாரம் ​இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்டு அமெரிக்கா​வுக்கு கடத்​தப்​பட்ட 657 பழங்​கால சிலைகள், அரிய பொருட்​கள் திருப்பி அளிக்​கப்​பட்டுள்​ளன.</p>
<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28 ஆம் திகதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய தூதரக அதி​காரி ராஜலட்​சுமி கடாமிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/us-returns-657-ancient-statues-stolen-from-india/">இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</title>
		<link>https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பஹல்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48703</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.</p>
<p>கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய &#8216;Operation Sindoor&#8217; மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p>
<p>லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 09:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐஸ்]]></category>
		<category><![CDATA[கரன்தெனிய ராஜு]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48541</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கரன்தெனிய ராஜு&#8217;விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவருக்கு எதிராக 15 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த இரு ஆண்டுகளில் 81 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/">இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கரன்தெனிய ராஜு&#8217;விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
<p>தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவருக்கு எதிராக 15 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த இரு ஆண்டுகளில் 81 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
<p>கடந்த 2024 முதல் தற்போது வரை, சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மேலும் 8 பேரை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் இதுவரை 1,800க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன், ஆயிரக்கணக்கான கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/">இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</title>
		<link>https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Apr 2026 05:02:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க – ஈரான்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48217</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக யுத்த நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது. இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மோதலை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும் மிகவும் அவசியமானவை என்பதை ஆரம்பம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/">அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p>
<p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக யுத்த நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது.</p>
<p>இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மோதலை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும் மிகவும் அவசியமானவை என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தியுள்ளோம். இது இப்பகுதியின் நீடித்த அமைதிக்கும், ஹொர்முஸ் நீரிணை ஊடான தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கும் உலகளாவிய வர்த்தக ஓட்டத்திற்கும் வழிவகுக்கும்.</p>
<p>இம்மோதல் ஏற்கனவே மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வலையமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. இராஜதந்திர வழிகள் மூலமான அமைதி தீர்வு மட்டுமே இப்பகுதியில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடும் ஆகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, கப்பல் போக்குவரத்து இடையூறுகள், அதிக சரக்குக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறும் என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/">அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</title>
		<link>https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 03:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47514</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/">இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது.</p>
<p>20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.</p>
<p>இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p>
<p class="isSelectedEnd">இந்த எரிபொருள் விநியோகம், இலங்கையில் அண்மையில் அதிகரித்துள்ள எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு முக்கிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p class="isSelectedEnd">குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிலையில், இந்த வரவு சந்தை நிலையை சீராக்க உதவும் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p class="isSelectedEnd">மேலும், இந்த உதவி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான பொருளாதார மற்றும் மூலதன ஒத்துழைப்பை மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p class="isSelectedEnd">கடந்த சில ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் போது, இந்தியா கடன் வசதிகள், எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.</p>
<p class="isSelectedEnd">இந்த எரிபொருள் கப்பல் வந்தடைந்த பின்னர், அவை விரைவாக உள்நாட்டு விநியோக அமைப்புகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படும் எனவும், முக்கிய சேவைகள் தடையின்றி செயல்பட இது உதவும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p>
<p>இந்த எரிபொருள் வரவு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இந்தியா &#8211; இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவாக உள்ளதை வெளிப்படுத்தும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/">இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</title>
		<link>https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 10:20:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33557</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த  5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/">இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த  5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.</p>
<p>கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் போதைப்பொருளை குறித்த பொலிஸ் அதிகாரி கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர்.</p>
<p>விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.</p>
<p>இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.</p>
<p>இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி , அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.</p>
<p>என்றாலும்,  2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் பொலிஸ் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/">இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</title>
		<link>https://oruvan.com/india-and-pakistan-clash-again/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Sep 2025 07:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32938</guid>

					<description><![CDATA[<p>17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-clash-again/">மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.</p>
<p>இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.</p>
<p>ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் இதுவரை 10 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.</p>
<p>அதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.</p>
<p>‘பி’ பிரிவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.</p>
<p>இதனையடுத்து சூப்பர்4 சுற்று 20-ம் திகதி தொடங்குகிறது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற 2 அணிகள் மோதுகின்றன. அதனையடுத்து 21-ம் திகதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள 2 அணிகள் மோதுகின்றன.</p>
<p>அதன்படி 21-ம் திகதி நடைபெற உள்ள சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சூப்பர்4 சுற்றில் வெற்றி அடையப் போவது யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-clash-again/">மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</title>
		<link>https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 10:46:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Santosh Jha]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சந்தோஷ் ஜா]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32606</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.</p>
<p>கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</title>
		<link>https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Nixon]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 04:46:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30662</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.</p>
<p>இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒன்றை செய்த பின்னர் வெள்ள அபாய அறிவிப்புகளை இரு நாடுகளும் பாரிமாறியிருந்தன.</p>
<p>ஆனால் காஸ்மீர் பல்ஹாம் பூங்காவில் சுற்றுலா பணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் ஏரிகள் பாதுகாப்பு குறித்து விடயங்களிலும் மற்றும் வெள்ள அபாய அறிவிப்பு உள்ளிட்ட பல பணிகளை இந்திய மத்திய அரசு நிறுத்தியிருந்தது.</p>
<p>ஆனாலும் பாகிஸ்தானை அண்மித்த பகுதிகளில் உள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படவுள்ளதை அறிந்து அபாய எச்சரிக்கையை பாக்கிஸ்தான் அரசுக்கு, மனிதாபிமான ரீதியில் மத்திய அரசு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
