<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/இந்தியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 18 Apr 2026 09:20:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இந்தியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/இந்தியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/</link>
					<comments>https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 09:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐஸ்]]></category>
		<category><![CDATA[கரன்தெனிய ராஜு]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48541</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கரன்தெனிய ராஜு&#8217;விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவருக்கு எதிராக 15 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த இரு ஆண்டுகளில் 81 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/">இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் &#8216;கரன்தெனிய ராஜு&#8217;விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
<p>தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவருக்கு எதிராக 15 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் கடந்த இரு ஆண்டுகளில் 81 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
<p>கடந்த 2024 முதல் தற்போது வரை, சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மேலும் 8 பேரை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் இதுவரை 1,800க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அத்துடன், ஆயிரக்கணக்கான கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/">இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/72-hour-detention-order-issued-on-karandeniye-raju-for-further-investigation/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</title>
		<link>https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Apr 2026 05:02:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க – ஈரான்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48217</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக யுத்த நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது. இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மோதலை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும் மிகவும் அவசியமானவை என்பதை ஆரம்பம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/">அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p>
<p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக யுத்த நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது.</p>
<p>இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மோதலை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும் மிகவும் அவசியமானவை என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தியுள்ளோம். இது இப்பகுதியின் நீடித்த அமைதிக்கும், ஹொர்முஸ் நீரிணை ஊடான தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கும் உலகளாவிய வர்த்தக ஓட்டத்திற்கும் வழிவகுக்கும்.</p>
<p>இம்மோதல் ஏற்கனவே மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வலையமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. இராஜதந்திர வழிகள் மூலமான அமைதி தீர்வு மட்டுமே இப்பகுதியில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடும் ஆகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, கப்பல் போக்குவரத்து இடையூறுகள், அதிக சரக்குக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறும் என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/us-iran-ceasefire-could-lead-to-lasting-peace/">அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</title>
		<link>https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 03:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47514</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/">இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர உள்ளது.</p>
<p>20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.</p>
<p>இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p>
<p class="isSelectedEnd">இந்த எரிபொருள் விநியோகம், இலங்கையில் அண்மையில் அதிகரித்துள்ள எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு முக்கிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p class="isSelectedEnd">குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிலையில், இந்த வரவு சந்தை நிலையை சீராக்க உதவும் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p class="isSelectedEnd">மேலும், இந்த உதவி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான பொருளாதார மற்றும் மூலதன ஒத்துழைப்பை மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p class="isSelectedEnd">கடந்த சில ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் போது, இந்தியா கடன் வசதிகள், எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.</p>
<p class="isSelectedEnd">இந்த எரிபொருள் கப்பல் வந்தடைந்த பின்னர், அவை விரைவாக உள்நாட்டு விநியோக அமைப்புகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படும் எனவும், முக்கிய சேவைகள் தடையின்றி செயல்பட இது உதவும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p>
<p>இந்த எரிபொருள் வரவு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இந்தியா &#8211; இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவாக உள்ளதை வெளிப்படுத்தும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ship-carrying-diesel-and-petrol-from-india-arrives-in-the-country-today/">இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</title>
		<link>https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 10:20:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33557</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த  5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/">இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த  5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.</p>
<p>கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் போதைப்பொருளை குறித்த பொலிஸ் அதிகாரி கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர்.</p>
<p>விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.</p>
<p>இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.</p>
<p>இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி , அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.</p>
<p>என்றாலும்,  2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் பொலிஸ் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-police-officer-arrested-in-india-court-orders-extradition/">இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</title>
		<link>https://oruvan.com/india-and-pakistan-clash-again/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Sep 2025 07:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32938</guid>

					<description><![CDATA[<p>17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-clash-again/">மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.</p>
<p>இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.</p>
<p>ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் இதுவரை 10 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.</p>
<p>அதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.</p>
<p>‘பி’ பிரிவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.</p>
<p>இதனையடுத்து சூப்பர்4 சுற்று 20-ம் திகதி தொடங்குகிறது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற 2 அணிகள் மோதுகின்றன. அதனையடுத்து 21-ம் திகதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள 2 அணிகள் மோதுகின்றன.</p>
<p>அதன்படி 21-ம் திகதி நடைபெற உள்ள சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சூப்பர்4 சுற்றில் வெற்றி அடையப் போவது யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-and-pakistan-clash-again/">மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</title>
		<link>https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 10:46:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Santosh Jha]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சந்தோஷ் ஜா]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32606</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.</p>
<p>கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>உலக அரசியல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்தரையாடல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>நேபாளத்தில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மை குறித்து தனது நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் புது டில்லிக்கு அறிக்கை அளிக்க உள்ளார் என்றும் அறியப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/santosh-jha-meets-ranil-ready-to-report-to-new-delhi/">ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு &#8211; புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</title>
		<link>https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Nixon]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 04:46:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30662</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது. இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சிந்து நதியும் அதனை சூழவுள்ள நிதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.</p>
<p>இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்தியா &#8211; பாகிஸ்தான் நாடுகள் 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒன்றை செய்த பின்னர் வெள்ள அபாய அறிவிப்புகளை இரு நாடுகளும் பாரிமாறியிருந்தன.</p>
<p>ஆனால் காஸ்மீர் பல்ஹாம் பூங்காவில் சுற்றுலா பணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் ஏரிகள் பாதுகாப்பு குறித்து விடயங்களிலும் மற்றும் வெள்ள அபாய அறிவிப்பு உள்ளிட்ட பல பணிகளை இந்திய மத்திய அரசு நிறுத்தியிருந்தது.</p>
<p>ஆனாலும் பாகிஸ்தானை அண்மித்த பகுதிகளில் உள்ள நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படவுள்ளதை அறிந்து அபாய எச்சரிக்கையை பாக்கிஸ்தான் அரசுக்கு, மனிதாபிமான ரீதியில் மத்திய அரசு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/india-issues-flood-warning-to-pakistan/">பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து</title>
		<link>https://oruvan.com/our-relations-with-india-pakistan-are-good-us-opinion/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 06:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29535</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/our-relations-with-india-pakistan-are-good-us-opinion/">இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p>
<p>இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும்.</p>
<p>இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார்</p>
<p>மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடி அக்கறை காட்டி தாக்குதல்களை நிறுத்தினர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேரழிவைத் தடுப்பதில் அமெரிக்காவின் உயர்மட்டத் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்” என்றார்</p>
<p>அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லாமல் இரு தரப்பு ராணுவங்களுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தங்களே போர் நிறுத்தத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/our-relations-with-india-pakistan-are-good-us-opinion/">இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்</title>
		<link>https://oruvan.com/philippines-agrees-to-expand-security-cooperation-with-india/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Aug 2025 17:00:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28785</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கைத்தொழில்துறை, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் இந்த ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பெரியசாமி குமரன் குறிப்பிடுகையில், இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்திருந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/philippines-agrees-to-expand-security-cooperation-with-india/">பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கைத்தொழில்துறை, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் இந்த ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பெரியசாமி குமரன் குறிப்பிடுகையில், இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்திருந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக் கட்டமைப்பு போன்ற இந்திய பாதுகாப்பு தளங்களின் ஏற்றுமதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு பாதுகாப்பு உற்பத்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.</p>
<p>பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தின் போது இரு நாடுகளது ஆயுதப் படைகளுக்கும் இடையிலான இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கான கூட்டு இராணுவப் பயிற்சி குறித்தும் கலந்துரையாடி உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு, கூட்டுப் பயிற்சிகள், கூட்டு ஒத்துழைப்பு, கடல்சார் நடவடிக்கைகள் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.</p>
<p>இவ்விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி முர்மு திரௌபதி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய அரசியல் தலைவர்களையும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை தெரிந்ததே.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/philippines-agrees-to-expand-security-cooperation-with-india/">பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்</title>
		<link>https://oruvan.com/petition-filed-against-mou-with-india/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 15:30:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28027</guid>

					<description><![CDATA[<p>இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவில், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உட்பட 27 நபர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கனிஷ்க விதாரன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் ஊடாக மனுதாரர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/petition-filed-against-mou-with-india/">இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவில், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உட்பட 27 நபர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.</p>
<p>சட்டத்தரணி கனிஷ்க விதாரன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் ஊடாக மனுதாரர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பாக ஜனவரி 27 மற்றும் ஜூன் 2ஆம் திகதிகளில் இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ அறிவிக்கப்படாமல் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இலங்கையர்களின் பயோமெட்ரிக் தரவை இந்தியா அணுக அனுமதிக்கும் என்றும், இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயற்பாடு என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது</p>
<p>The post <a href="https://oruvan.com/petition-filed-against-mou-with-india/">இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
