<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விளையாட்டு Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/category/விளையாட்டு/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 27 May 2026 12:12:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>விளையாட்டு Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/category/விளையாட்டு/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</title>
		<link>https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:49:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Sri Lankan cycling industry]]></category>
		<category><![CDATA[இலங்கை சைக்கிளோட்டத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49418</guid>

					<description><![CDATA[<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட ஆறு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பதவி வகித்துள்ள போதிலும், அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போட்டிகள் காரணமாக இந்தக் குழப்பநிலைக்கு இதுவரை எவராலும் தீர்வைக் காண முடியவில்லை. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/">அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட ஆறு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பதவி வகித்துள்ள போதிலும், அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போட்டிகள் காரணமாக இந்தக் குழப்பநிலைக்கு இதுவரை எவராலும் தீர்வைக் காண முடியவில்லை.</p>
<p>இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்திற்கான (2024 &#8211; 26) தேர்தலை கடந்த 2024 ஜூலை 25 அன்று நடத்துவதற்கு இறுதியாக எடுக்கப்பட்ட முயற்சியும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.</p>
<p>இதனால் தற்போது இலங்கையின் சைக்கிளோட்ட நிர்வாக விவகாரங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவரது அனுமதியுடன் சில உள்நாட்டு சைக்கிளோட்டப் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் இலங்கை பங்கேற்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அற்றுப்போயுள்ளன.</p>
<p>இலங்கை தேசிய சைக்கிளோட்ட அணி கடைசியாக 2019 டிசம்பரில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் (SAG Games), அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றிருந்தது.</p>
<p>அந்த காத்மாண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த நிர்வாகக் குழப்பங்களின் பின்னணி 2022 மே 29 அன்று நடைபெற்ற தேர்தலுடன் தீவிரமடைந்தது.</p>
<p>அப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா, அதே ஆண்டு ஜூலை மாதம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதன் பின்னர் சம்மேளனம் சுமார் ஏழு மாதங்கள் தலைவரின்றியே இயங்கியது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களால் 2024 ஜூலையில் நடத்தவிருந்த தேர்தலும் நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>குறிப்பிடத்தக்க அம்சமாக, உள்நாட்டில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI) இன்னமும் 2018-19 காலப்பகுதியில் தலைவராக இருந்த சர்வதேச நடுவர் என். கருணாரத்ன உள்ளிட்ட செயற்குழுவையே இலங்கையின் உத்தியோகபூர்வ நிர்வாகமாக இன்றுவரை அங்கீகரித்துள்ளது.</p>
<p>முன்னதாக, தங்களது பதவிக்காலத்தில் தணிக்கை அறிக்கைகளை (Audit Reports) சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் என். கருணாரத்ன, செயலாளர் நிஹால் குலசேகர மற்றும் பொருளாளர் சேனக ரணசிங்க ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு நீண்டகாலத் தடை விதித்திருந்தது. எனினும், தற்போதைய அமைச்சர் சுனில் குமார கமகே பதவியேற்றதும் அத்தடையை நீக்கினார். அதேவேளை, சம்மேளனத்தின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.</p>
<p>இவ்வாறான சூழலில், இலங்கையின் தற்போதைய நிர்வாக நெருக்கடி குறித்து அறிவித்துள்ள சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI), இலங்கையானது சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் பங்கேற்க வேண்டுமாயின், அது சர்வதேச நடுவர் என். கருணாரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே சாத்தியமாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-cycling-hit-by-mismanagement-international-ban-continues-for-7-years/">அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</title>
		<link>https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 15:07:56 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[உலகக் கிண்ண கால்பந்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49358</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ், 2026 உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் ஈரான் அணி ‘நிச்சயமாக’ பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போட்டியை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/">உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது.</p>
<p>இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ், 2026 உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் ஈரான் அணி ‘நிச்சயமாக’ பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அதே நேரத்தில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள், ஈரான் அணியின் பயணம் மற்றும் அணி மீதான அணுகுமுறை தொடர்பான கவலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>‘அனைத்து வீரர்களும் தொழில்நுட்ப குழுவினரும், இஸ்லாமிய புரட்சிக் காவல் படையில் கட்டாய இராணுவ சேவை செய்தவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விசா பெற வேண்டும்’ என்றும் மெஹதி தாஜ் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையாலும் ஈரான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>விசா, பாதுகாப்பு மற்றும் ஈரான் வீரர்கள், அதிகாரிகள் மீதான அணுகுமுறை குறித்து உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், ‘எங்கள் நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் கொள்கைகளில் இருந்து பின்வாங்காமல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்போம்’ என்றும் மெஹதி தாஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதற்கு முன் கடந்த மாதம், கனடா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஜுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/iranian-players-confirmed-to-travel-to-us-for-world-cup/">உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்</title>
		<link>https://oruvan.com/new-plan-to-build-sri-lankan-cricket/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 12:58:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இலங்கை கிரிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49275</guid>

					<description><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தலைமையிலான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-plan-to-build-sri-lankan-cricket/">இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளார்.</p>
<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர்.</p>
<p>குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி ஆகியோருடன் துஷிர ரதல்ல, அவன்தி கலம்பனே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் அடங்குகின்றனர்.</p>
<p>இந்தக் குழுவில் பிரதான இரு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்தும் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சிறந்த நிர்வாகத்தை அமைத்தல் மற்றும் களத்தில் சிறந்த செயல்திறன் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு பணிகள் விரைவாக இடம்பெறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>மறுசீரமைப்புகளின் பின்னர் விரைவாக இலங்கை கிரிக்கெட் அணி கடந்த காலத்தை போன்று சிறப்பான வெற்றிகளை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-plan-to-build-sri-lankan-cricket/">இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</title>
		<link>https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 06:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Ryan Rickelton]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49244</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார்.</p>
<p>வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு மும்மை அணி சார்பில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.</p>
<p>எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை குவித்திருந்தது.</p>
<p>தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் ரியான் ரிகெல்டன் 44 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை குவித்தார்.</p>
<p>இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதம் மற்றும் அந்த அணியின் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகிய சாதனைகளை அவர் முறியடித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/rickelton-breaks-sanath-jayasuriyas-18-year-record/">சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 12:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[KKR]]></category>
		<category><![CDATA[Kolkata Knight Riders]]></category>
		<category><![CDATA[Shreyas Iyer]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49068</guid>

					<description><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/">ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.</p>
<p>இதனைடுத்த 2025ம் ஆண்டு இடம்பெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<br />
தற்போது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.</p>
<p>ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்த அணியின் தலைவராக இருந்தபோது, ​​சந்திரகாந்த் பண்டிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.</p>
<p>இந்நிலையிலேயே, ஐயரை விடுவிக்க கொல்கத்தா நிர்வாகம் ஏன் முடிவு செய்தது என்பதை பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>&#8220;துரதிர்ஷ்டவசமாக, எங்களால் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஒரு அற்புதமான வீரர், அவர் தலைவராக எங்களுக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.</p>
<p>அவர் அணியைக் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.</p>
<p>ஆனால் சில சமயங்களில், சில சூழ்நிலைகள் எழுகின்றன மற்றும் எதிர்காலத் திட்டங்கள் அத்தகைய வீரர்களைக் கைவிட உங்களைக் கட்டாயப்படுத்தும் என சந்திரகாந்த் பண்டிட் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-was-shreyas-iyer-released-former-kolkata-coach-explains/">ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்</title>
		<link>https://oruvan.com/chelsea-coach-sacked/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 09:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chelsea]]></category>
		<category><![CDATA[Football News]]></category>
		<category><![CDATA[Sports News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48775</guid>

					<description><![CDATA[<p>தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட  தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர்,  நான்கு மாதங்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் பயிற்சியின் கீள் விளையாடிய 23 போட்டிகளில் 11இல் மட்டுமே செல்சி அணி வெற்றி பெற்றிருந்தது. செல்சி அணியின் 114 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கோல் கூட அடிக்காமல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chelsea-coach-sacked/">செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட  தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது.</p>
<p>கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர்,  நான்கு மாதங்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>அவரின் பயிற்சியின் கீள் விளையாடிய 23 போட்டிகளில் 11இல் மட்டுமே செல்சி அணி வெற்றி பெற்றிருந்தது.</p>
<p>செல்சி அணியின் 114 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கோல் கூட அடிக்காமல் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>பிரைட்டன் அணிக்கு எதிரான 1-0 என்ற கோல் கணக்கில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ரோசெனியர் தனது அணியின் வீரர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.</p>
<p>அணியின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், அணியின் இணைப் பயிற்சியாளர் காலும் மெக்ஃபார்லேன், இந்தப் பருவம் முடியும் வரை இடைக்கால மேலாளராகப் பொறுப்பேற்பார் என  அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பிரைட்டன் அணியுடன் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து செல்சி அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவுகள் மீண்டும் தகர்ந்துள்ளன.</p>
<p>இன்னும் நான்கு சுற்றுகளே மீதமுள்ள நிலையில், செல்சி அணி 48 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/chelsea-coach-sacked/">செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி &#8211; தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்</title>
		<link>https://oruvan.com/ayush-mathre-has-withdrawn-from-the-ipl-series/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 09:47:01 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Ayush Mhatre]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48666</guid>

					<description><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு இடது தொடை தசை நார் காயமடைந்துள்ளதாகவும், இதில் இருந்து குணமடைய ஆறு முதல் 12 வாரங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே, முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 177.88 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ayush-mathre-has-withdrawn-from-the-ipl-series/">சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி &#8211; தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.</p>
<p>அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.</p>
<p>அவருக்கு இடது தொடை தசை நார் காயமடைந்துள்ளதாகவும், இதில் இருந்து குணமடைய ஆறு முதல் 12 வாரங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஆயுஷ் மாத்ரே, முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 177.88 ஸ்ட்ரைக் ரேட்டில், 33.50 சராசரியில் 201 ஓட்டங்களை குவித்திருந்தார்.</p>
<p>சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற ஆயுஷ் மாத்ரேவின் துடுப்பாட்ட முக்கிய காரணமாகும்.</p>
<p>இறுதியாக விளையாடியப் போட்டியிலும் 13 பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில், மாத்ரேவிற்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்ய சென்னை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது தொடரில் இருந்து விலகியிருந்தார்.</p>
<p>இந்நிலையில், தற்போது ஆயுஷ் மாத்ரே தொடரில் இருந்து விலகியுள்ளமை சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ayush-mathre-has-withdrawn-from-the-ipl-series/">சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி &#8211; தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</title>
		<link>https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 08:48:14 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48663</guid>

					<description><![CDATA[<p>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/">டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், புதிய வீரர்களை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>இதனால் புதிய திட்டம் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன்படி, 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த வீரர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாட வைப்பதே நோக்கமாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல போட்டிகள் வரவிருப்பதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆண்டு ஏராளமாக டி20 கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>புதிய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிறந்த 35 வீரர்களை இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-cricket-board-decides-to-form-two-teams-for-t20-cricket-series-35-players-to-be-considered/">டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி</title>
		<link>https://oruvan.com/new-zealand-win-first-match-against-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 05:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48521</guid>

					<description><![CDATA[<p>நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா தேசிய மைதானத்​தில் நடை​பெற்​றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹென்றி நிக்​கோல்ஸ் 68 ஓட்டங்களையும், டீன் ஃபாக்​ஸ்​கி​ராப்ட் 59 ஓட்டங்களையும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-zealand-win-first-match-against-bangladesh/">பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது.</p>
<p>இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா தேசிய மைதானத்​தில் நடை​பெற்​றது.</p>
<p>இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதது.</p>
<p>துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹென்றி நிக்​கோல்ஸ் 68 ஓட்டங்களையும், டீன் ஃபாக்​ஸ்​கி​ராப்ட் 59 ஓட்டங்களையும், வில் யங் 30 ஓட்டங்களையும், நேதன் ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p>
<p>பங்களாதேஸ் அணி தரப்​பில் தஸ்​கின் அகமது, ஷோரிபுல் இஸ்​லாம், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்​பற்​றினர்.</p>
<p>248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்​குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஸ் அணி 48.3 ஓவர்​களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துப்பாட்டத்தில் அதி​கபட்​ச​மாக சைஃப் ஹசன் 57 ஓட்டங்களையும், தவுஹித் ஹிர்​தோய் 55 ஓட்டங்களையும், லிட்​டன் தாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p>
<p>நியூஸிலாந்து அணி சார்​பில் பிளேயர் டிக்​னர் 4 விக்கெட்டுகளையும், நேதன் ஸ்மித் 3 விக்​கெட்​களையும் வீழ்த்​தினர்.</p>
<p>26 ஒட்டங்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்டம் எதிர்வரும் 20-ம் திகதி நடைபெற உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-zealand-win-first-match-against-bangladesh/">பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சென்னை அணிக்கு பேரிடி &#8211; தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்</title>
		<link>https://oruvan.com/khaleel-ahmed-has-been-ruled-out-of-ipl-2026/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 07:44:09 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Chennai Super Kings]]></category>
		<category><![CDATA[CSK]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[IPL 2026]]></category>
		<category><![CDATA[Khaleel Ahmed]]></category>
		<category><![CDATA[KKR]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48449</guid>

					<description><![CDATA[<p>வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது. இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/khaleel-ahmed-has-been-ruled-out-of-ipl-2026/">சென்னை அணிக்கு பேரிடி &#8211; தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார்.</p>
<p>சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.</p>
<p>இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது.</p>
<p>இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.</p>
<p>இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். சென்னை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவர் செயற்பட்டிருந்தார்.</p>
<p>இந்நிலையில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/khaleel-ahmed-has-been-ruled-out-of-ipl-2026/">சென்னை அணிக்கு பேரிடி &#8211; தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
