அமெரிக்க போர் விமானி மீட்பு

அமெரிக்க போர் விமானி மீட்பு

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாரியே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை இராணுவ வரலாற்றின் மிக முக்கியமான வெற்றியென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேற்படி விமானத்தில் இருந்த மற்றுமொரு வீரரும் மீட்கப்பட்ட நிலையில், ஒரே போர்க்களத்தில் இரு வீரர்கள் தனித்தனியாக மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றது . கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை போர் விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது.

இதேநேரம் எதிரி நாட்டு விமானியை பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )