தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்த இதொகா உறுப்பினர்
ஹட்டன் பகுதியில் இயங்கி வரும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஷின் உறுப்பினர் ஒருவர் மது போதையில் அறை ஒன்றில் தங்கியிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும், பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சந்தரலிங்கம் பிரதீப் நேரில் சென்று இதை கண்டறிந்துள்ளார்.
நீண்டகாலமாக பாவனைக்குட்படுத்தப்படாத குறித்த கட்டித்தை பிரதி அமைச்சர் பார்வையிட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
தாங்கள் இங்கு இருப்பதற்கு என்ன காரணம் என பிரதிஅமைச்சர் கேள்வி ஏழுப்பியதற்கு, தனக்கு சுகயினம் காரணமாக இங்கு தாம் இளப்பாரி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் இளப்பார முடியாதெனவும் தங்களுக்கு தங்களின் உடல் நிலை சீராக இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற முடியும் தொழில் நேர காலப்பகுதியில் இது போன்ற விடயங்களை உள்வாங்க முடியாது. ஆகையால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த கட்டிடத்தில் உள்ள அறைகளில் மக்களின் பயண்பாட்டிற்கும் வழங்கப்படாமல் இருந்த உபகரணங்கள் சிலவற்றை இனங்காண முடிந்தது.
இந்நிலையில், குறித்த கட்டித்தில் உள்ள சில அறைகளை பார்வையிட வேண்டுமென அமைச்சர் கோரிய போதும் ஒரு சில அறைகளுக்கு எம்மிடம் சாவிகள் இல்லையென பதில் வழங்கியதை அடுத்து இது தொடர்பான விசாரனைகளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.