இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ளது.

வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Share This