<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>President of Sri Lanka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/president-of-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/president-of-sri-lanka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 25 Feb 2025 03:45:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>President of Sri Lanka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/president-of-sri-lanka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் &#8211; உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது</title>
		<link>https://oruvan.com/threat-to-security-intelligence-warns-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 03:45:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Anurakumara dissanayaka]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11953</guid>

					<description><![CDATA[<p>பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/threat-to-security-intelligence-warns-the-president/">பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் &#8211; உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.</p>
<p>இதன் விளைவாக, தொடர்புடைய பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p>
<p>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமீப நாட்களாக மக்களிடம் நெருங்கமாக இருப்பதையும், கூட்டங்களை நடத்துவதையும், அவர்களுடன் சுமுகமாகப் பேசுவதையும் காண முடிகிறது.</p>
<p>இந்த நடைமுறை ஜனாதிபதியின் பாதுகாப்பிற்குப் பொருத்தமானதல்ல என்ற கருத்தையும் சில விமர்சகர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.</p>
<p>தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறியுள்ளனர்.</p>
<p>ஆனால் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க, அவரது பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று பல தரப்பினர் கருதுகின்றனர்.</p>
<p>இதன் காரணமாக, பொதுமக்களுக்கு அருகாமையில் இருப்பதைக் குறைக்குமாறு பாதுகாப்புப் படையினர் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/threat-to-security-intelligence-warns-the-president/">பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் &#8211; உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 08:09:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5016</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது. அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார். மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார்.</p>
<p>மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை நிரூபித்துள்ளதுடன் ஒரு வலுவான அரசியல் நபராகவும் உருவெடுத்துள்ளார்.</p>
<p><strong>தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அநுர?</strong></p>
<p>தனது ஆட்சியில் முதல் 100 நாட்களுக்குள் அதிகாரத்தை நிறுவி, மக்களின் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார் பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், சில வாரங்களுக்குள் தனது அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட நாடாளுமன்றின் முதல் சபாநாயகரை இழந்த போதிலும், தொடர்ந்து ஒரு வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்தி வருகின்றார்.</p>
<p>சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நிறைவேற்றப்படாத சில நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்ற பிக்கர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிபத்த வழக்கை விசாரிக்க கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரண்டு மூத்த புலனாய்வாளர்களை நியமித்தார்.</p>
<p>மேலும், விசாரணைகள் குறித்து கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தி தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும, அவர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.</p>
<p>பிள்ளையான் என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டார்.</p>
<p>கூடுதலாக, வரி ஏய்ப்பு செய்ததற்காக அர்ஜுன் அலோசியஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்து வந்தவர்கள் விரைவாக பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், மெண்டிஸ் டிஸ்டில்லரீஸின் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.</p>
<p><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></p>
<p>அநுரவின் ஆட்சியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, மேலும் பங்குச் சந்தையில் 40 வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் இராஜதந்திர முயற்சிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும்பாலும் சுமூகமாக நடந்துள்ளன.</p>
<p>இருப்பினும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனினும் அந்தப் பிரச்சியை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.</p>
<p>மேலும், பொலிஸ்மா அதிபர், தலைமை நீதிபதி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.</p>
<p><strong>ஊழல் எதிர்ப்பு முயற்சிகள்</strong></p>
<p>ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட &#8220;க்ளீன் ஸ்ரீலங்கா&#8221; வேலைத் திட்டம் பலரிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளதுடன் பரவலான ஆதரவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அநுரவின் தலைமைத்துவம் அதிர்ச்சியூட்டும் சீர்திருத்தங்கள் உட்பட தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சிலர் கணித்திருந்தாலும், அவர் படிப்படியாக ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனினும், இதனை மெதுவான வேகம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மாற்றத்தின் அளவிடப்பட்ட வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.</p>
<p><strong>அநுர முன் உள்ள சவால்கள்</strong></p>
<p>சந்தேகத்திற்கு இடமின்றி, இனப் பிளவுகளை சரிசெய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்போது ஜனாதிபதி அநுரகுமார ஏராளமான முக்கியமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>இதன்படி, வேறூன்றி போயிருக்கும் ஊழலை ஒழிப்பதும், சில அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதும் எளிதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>மேலும், அநுரகுமாரவின் குழுவினர் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் இன்னும் அனுபவம் போதவில்லை எனவும் இது வெளிப்படையாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார மக்களின் ஆதரவுடன் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார், ஆனால் இப்போது அவர் அரசியல் உயரடுக்கின் சிக்கலான இயக்கவியலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</title>
		<link>https://oruvan.com/presidents-new-years-message/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 02:49:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2025]]></category>
		<category><![CDATA[anura]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[New Year Wishes]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4811</guid>

					<description><![CDATA[<p>மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-new-years-message/">ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.</p>
<p>வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது.</p>
<p>அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.</p>
<p>கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.</p>
<p>அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p>
<p>இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம்.</p>
<p>அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி, புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.</p>
<p>சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது.</p>
<p>விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது.</p>
<p>இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.</p>
<p>தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-new-years-message/">ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி</title>
		<link>https://oruvan.com/presidents-christmas-message/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 03:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Anurakumara dissanayaka]]></category>
		<category><![CDATA[Christmas]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[நத்தார் பண்டிகை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3839</guid>

					<description><![CDATA[<p>பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். “இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-christmas-message/">ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>“இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.</p>
<p>துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை.</p>
<p>அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.</p>
<p>இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.</p>
<p>நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.</p>
<p>சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.</p>
<p>அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.</p>
<p>மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.</p>
<p>இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும்.</p>
<p>அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன், மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.</p>
<p>சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.</p>
<p>வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.</p>
<p>இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!”</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-christmas-message/">ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-dissanayake-returns-to-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 02:48:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2975</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, விஜித ஹேரத் உள்ளிட்டவர்களும் நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு 10:00 மணியளவில், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அநுரகுமார திஸாநாயக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-dissanayake-returns-to-the-country/">நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, விஜித ஹேரத் உள்ளிட்டவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.</p>
<p>நேற்றிரவு 10:00 மணியளவில், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.</p>
<p>அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயமாக இதுவாகும்.</p>
<p>இந்த வியஜத்தின் போது, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியால் அரச மரியாதையுடன் வரவேற்று, பின்னர் நட்பு ரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.</p>
<p>பொருளாதார உடன்படிக்கையாக கருதப்படும் எட்கா உடன்படிக்கைக்கு ஜனாதிபதியும் பிரதமர் மோடியுடன் இணக்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.</p>
<p>இதற்கு மேலதிகமாக இந்திய ஜனாதிபதி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய நிதியமைச்சர் மற்றும் இந்திய வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தித்திருந்தனர்.</p>
<p>இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-dissanayake-returns-to-the-country/">நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</title>
		<link>https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 09:41:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Prime Minister of India]]></category>
		<category><![CDATA[Sri Lankan President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2750</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார். மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/">இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.</p>
<p>மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.</p>
<p>குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p>இந்த நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.</p>
<p>இதன்போது இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.</p>
<p>இதில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p>
<p>இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,</p>
<p>ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தமைக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் இது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். ஜனாதிபதியாக, உங்கள் முதல் அரசு முறைப் பயணத்திற்கு நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.</p>
<p>இந்த பயணத்துடன், எங்கள் உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாக்கப்படுகின்றன. எங்கள் கூட்டாண்மைக்காக, நாங்கள் ஒரு எதிர்கால தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ளோம்.</p>
<p>&#8220;எங்கள் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை வலியுறுத்தியுள்ளோம்,&#8221; என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.</p>
<p>இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், &#8220;பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்&#8221; என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.</p>
<p>மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கியமான தளம் என்று நம்புவதாகவும்&#8221; பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிந்தார்.</p>
<p>கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அவர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>&#8220;இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்களின் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன&#8221; என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.</p>
<p>இதனையடுத்து உரையாற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.</p>
<p>மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார அழைப்பு விடுத்தார்.</p>
<p>இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.</p>
<p>&#8220;இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கை நிலப்பரப்பை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p>
<p>இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,&#8221; என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/">இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-dissanayake-met-indian-prime-minister-narendra-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 08:06:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Prime Minister of India]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[இந்தியப் பிரதமர்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2721</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய &#8211; இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-dissanayake-met-indian-prime-minister-narendra-modi/">ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.</p>
<p>மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p>இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.</p>
<p>இந்திய &#8211; இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு பிற்பகல் நடைபெற உள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/pEHwToT_Ur8?si=6F5caU2KdKjTvG3W" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-dissanayake-met-indian-prime-minister-narendra-modi/">ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அரச மரியாதையுடன் வரவேற்பு</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-receives-grand-welcome-in-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 05:21:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[திரௌபதி முர்மு]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[අනුර කුමාර දිසානායක]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2662</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-receives-grand-welcome-in-india/">ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அரச மரியாதையுடன் வரவேற்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.</p>
<p>குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p>இதன்போது பூரண அரச மரியாதையுடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p>அதன்பின், இருதரப்பு பிரதிநிதிகளும் இரு நாட்டு தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, ராஜ்கொட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவுச்சின்னத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை நினைவுகூரும் வகையில் ராஜ்கொட்டில் உள்ள காந்தி தர்ஷன் வளாகத்தில் அசோக மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.</p>
<p>பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (16) நடைபெறிருந்தது. அதேபோல், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றிருந்தது.</p>
<p>அதேவேளை, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோரையும் ஜனாதிபதி நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.</p>
<p><iframe title="Ceremonial welcome of President Anura Kumara Dissanayake of Sri Lanka at Rashtrapati Bhavan" width="1400" height="788" src="https://www.youtube.com/embed/I5PWQO97djc?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-receives-grand-welcome-in-india/">ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அரச மரியாதையுடன் வரவேற்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-and-prime-minister-modi-meet-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 02:10:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Droupadi Murmu]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Prime Minister of India]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2638</guid>

					<description><![CDATA[<p>மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பல முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன. அத்துடன், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-prime-minister-modi-meet-today/">ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.</p>
<p>இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பல முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன.</p>
<p>அத்துடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) இடம்பெறவுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (15) பிற்பகல் இந்தியா சென்றதுடன், புதுடில்லி வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.</p>
<p>இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.</p>
<p>ஜனாதிபதி தங்கியுள்ள டில்லியில் உள்ள ITC மௌரியா ஹோட்டலில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-prime-minister-modi-meet-today/">ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
