<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>#Oruvan Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/oruvan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/oruvan/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 29 Apr 2026 04:07:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>#Oruvan Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/oruvan/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 04:07:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[gazette]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49200</guid>

					<description><![CDATA[<p>டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவால் 2026ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பின் மூலம் முறைப்படுத்தப்பட்டது. இந்த வர்த்தமானியின்படி,, சமூக வாழ்க்கைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/">அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவால் 2026ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கையொப்பமிடப்பட்ட அறிவிப்பின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.</p>
<p>இந்த வர்த்தமானியின்படி,, சமூக வாழ்க்கைக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறு அபாயத்தையும் கருத்தில் கொண்டு, பொது நிறுவனங்கள், அரச துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் வழங்கும் சேவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.</p>
<p>அத்தியாவசிய சேவைகளில் மின்சார வழங்கல், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் சாலைகள், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு ஆகியவையும் அடங்கும்.</p>
<p>மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகால், உணவு விநியோகம், வேளாண்மை சார்ந்த சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவையும் அத்தியாவசியமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்த உத்தரவானது, ஆம்புலன்ஸ் சேவைகள், அரச வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், மேலும் கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர்கள் போன்ற களநிலை அலுவலர்கள் உட்பட, மாவட்ட மற்றும் கோட்டச் செயலகங்களால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான நிர்வாகப் பணிகளையும் உள்ளடக்கியுள்ளது.</p>
<p>கழிவு மேலாண்மை, தீயணைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் போன்ற உள்ளாட்சி அமைப்பு சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.</p>
<p>டித்வா புயலைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதையும், நாட்டில் இயல்பு நிலையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/essential-services-notification-under-emergency-regulations/">அத்தியாவசிய சேவைகள் அவசரநிலை விதிமுறைகளின் கீழ் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி</title>
		<link>https://oruvan.com/fall-in-the-prices-of-gold-and-silver-in-the-international-market/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 05:14:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Gold and silver]]></category>
		<category><![CDATA[market]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[prices]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49172</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது. மேலும், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fall-in-the-prices-of-gold-and-silver-in-the-international-market/">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.</p>
<p>இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.</p>
<p>மேலும், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.</p>
<p>இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/fall-in-the-prices-of-gold-and-silver-in-the-international-market/">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது</title>
		<link>https://oruvan.com/parliamentarian-arjuna-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 05:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Arjuna]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Parliamentarian]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49144</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா  கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/parliamentarian-arjuna-arrested/">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா  கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இளவாலை பொலிஸாரால் அவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/parliamentarian-arjuna-arrested/">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தம்புள்ளை &#8211; மாத்தளை பிரதான வீதியில் விபத்து &#8211; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி</title>
		<link>https://oruvan.com/accident-on-dambulla-matale-main-road-11-people-admitted-to-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2026 07:45:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[dambulla]]></category>
		<category><![CDATA[matala]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49117</guid>

					<description><![CDATA[<p>தம்புள்ளை &#8211; மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-on-dambulla-matale-main-road-11-people-admitted-to-hospital/">தம்புள்ளை &#8211; மாத்தளை பிரதான வீதியில் விபத்து &#8211; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தம்புள்ளை &#8211; மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p>
<p>இதன்போது காயமடைந்தவர்கள் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-on-dambulla-matale-main-road-11-people-admitted-to-hospital/">தம்புள்ளை &#8211; மாத்தளை பிரதான வீதியில் விபத்து &#8211; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Apr 2026 05:24:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Drug]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[million]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49084</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/">விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p>
<p>அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்பட கலைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி என்பன விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/">விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</title>
		<link>https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:57:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48765</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும். 2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும்.</p>
<p>2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது.</p>
<p>இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 4,372 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>2022ம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பொருளாதார ரீதியாகத் திவாலான நாடாக அறிவிக்கப்பட்டபோது, ​​அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,464 டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை, அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும்.</p>
<p>இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உற்பத்தித் திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48762</guid>

					<description><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். நோய் எதிர்ப்புத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.</p>
<p>இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது.</p>
<p>தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p>
<p>இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/america-has-crossed-the-line-iran-announces-it-will-not-participate-in-the-talks/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 11:43:39 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Iran ceasefire deal]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[Strait of Hormuz]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48625</guid>

					<description><![CDATA[<p>இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக ஈரானியக் குழு பாகிஸ்தானுக்குப் பயணிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது என்றும், அமெரிக்காவின் போர் நிறுத்த மீறல் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஒரு அமைதியான நாடு என்றும், இராஜதந்திர செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்கா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/america-has-crossed-the-line-iran-announces-it-will-not-participate-in-the-talks/">அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக ஈரானியக் குழு பாகிஸ்தானுக்குப் பயணிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகங்களிடம் பேசிய அவர், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது என்றும், அமெரிக்காவின் போர் நிறுத்த மீறல் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஈரான் ஒரு அமைதியான நாடு என்றும், இராஜதந்திர செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்கா அக்கறை காட்டவில்லை என்றும், அது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு போர் நிறுத்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் இஸ்மாயில் பாகாயி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>அமெரிக்காவின் முன்மொழிவுகள் அற்பமானவை என்றும், அமெரிக்காவின் கோரிக்கைகள் யதார்த்தமற்றவை என்றும் இஸ்மாயில் பகாய் கூறியுள்ளார்.</p>
<p>ஈரான் தனது கோரிக்கைகளைத் தெளிவாகக் கூறியுள்ளது, அவற்றை மாற்றிக்கொள்ளாது. ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தில், நாங்கள் காலக்கெடுவையோ அல்லது இறுதி எச்சரிக்கைகளையோ நம்புவதில்லை.</p>
<p>ஈரானிலிருந்து அணுசக்திப் பொருட்களை வெளியேற்றுவது பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை என்றும், தனது அணுசக்தி சாதனங்கள் நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதே ஈரானின் தெளிவான நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்து அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும், கடற்படை முற்றுகையை விதித்து ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்போதைய போர் போன்ற சூழ்நிலை காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கடல் போக்குவரத்தை ஒருதலைப்பட்சமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.</p>
<p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, போர்நிறுத்தத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்கா அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை, அதன் விளைவுகள் ஒருபோதும் நல்லதாக இருக்காது.</p>
<p>முந்தைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா நம்மீது நடத்திய தாக்குதல்களை நம்மால் மறக்க முடியாது.</p>
<p>அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு புதிய ஆக்கிரமிப்பைத் தொடங்க விரும்பினால், நமது ஆயுதப் படைகள் அதற்குப் பதிலடி கொடுக்கும், நமது தேசிய நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருந்தது.</p>
<p>பாகிஸ்தானிய மத்தியஸ்தரின் விளக்கம் இருந்தபோதிலும், லெபனானில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று அமெரிக்கா கூறியது.</p>
<p>இந்தியக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டது குறித்து ஈரானிய நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன என்று இஸ்மாயில் பகாய் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/america-has-crossed-the-line-iran-announces-it-will-not-participate-in-the-talks/">அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 07:28:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48597</guid>

					<description><![CDATA[<p>மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, &#8216;கிளீன் ஸ்ரீலங்கா&#8217; திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 10 நவீன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/">மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p>
<p>போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, &#8216;கிளீன் ஸ்ரீலங்கா&#8217; திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p>
<p>அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.</p>
<p>இப்பேருந்துகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.</p>
<p>33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்தச் சேவையானது மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</p>
<p>மேலும், இந்த போக்குவரத்து வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால், சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/">மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்</title>
		<link>https://oruvan.com/907-kilograms-of-illegally-imported-dried-turmeric-seized/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Apr 2026 06:13:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[907 kilograms]]></category>
		<category><![CDATA[illegally]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[turmeric]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48277</guid>

					<description><![CDATA[<p>பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள &#8216;விஜய&#8217; கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூடைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/907-kilograms-of-illegally-imported-dried-turmeric-seized/">சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள &#8216;விஜய&#8217; கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூடைகள் சோதனையிடப்பட்டன.</p>
<p>இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,  சந்தேகத்திற்கிடமான 16 மூடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/907-kilograms-of-illegally-imported-dried-turmeric-seized/">சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
