<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐக்கிய தேசியக் கட்சி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஐக்கிய-தேசியக்-கட்சி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 09 Jan 2026 13:05:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஐக்கிய தேசியக் கட்சி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஐக்கிய-தேசியக்-கட்சி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை</title>
		<link>https://oruvan.com/we-have-no-problem-with-sajith-acting-as-the-leader-of-the-alliance/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 13:05:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42825</guid>

					<description><![CDATA[<p>“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இடஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம். முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இரு தரப்பில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-no-problem-with-sajith-acting-as-the-leader-of-the-alliance/">கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.”</p>
<p>இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இடஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.</p>
<p>முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இரு தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்க வரவேண்டும்.</p>
<p>கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதில் பிரச்சினை கிடையாது. ஏனெனில் அவர்களுக்குதான் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது. இந்த உண்மையை ஏற்க வேண்டும்.</p>
<p>கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் செயல்பட வேண்டும். கட்சி ஆதரவாளர்களின் மனநிலையை ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-have-no-problem-with-sajith-acting-as-the-leader-of-the-alliance/">கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும்</title>
		<link>https://oruvan.com/unp-and-unp-should-work-together/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 03:29:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37010</guid>

					<description><![CDATA[<p>‘ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த இணைப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-and-unp-should-work-together/">ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த இணைப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு கட்சியினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு இணைந்து செயற்படும்போது அந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்களே தற்போது இடம்பெறுகின்றன.</p>
<p>இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின்போது பல முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு கட்சிகளும் இணைந்து நாட்டின் ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.</p>
<p>தலைமைத்துவம் தொடர்பில் நாங்கள் யாரும் தற்போது அதுதொடர்பில் கதைக்கவில்லை. அது எங்களுக்கு தற்போது பிரச்சினையாக தெரியவில்லை. எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம் என நம்புகிறோம்.</p>
<p>அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்துகொள்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பில் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.</p>
<p>நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதால், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும். எமது பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதில் பிரச்சினை இல்லை.</p>
<p>என்றாலும் இன்னும் காலம் இருப்பதால், தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்காத கட்சிகள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது’ என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-and-unp-should-work-together/">ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி &#8211; சஜித் வெளியிட்ட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/samagi-jana-bala-shakti-to-merge-with-united-national-party-sajiths-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 05:36:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34926</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த ஒருமனதாக முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார். மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-jana-bala-shakti-to-merge-with-united-national-party-sajiths-announcement/">ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி &#8211; சஜித் வெளியிட்ட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p>
<p>நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த ஒருமனதாக முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.</p>
<p>மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரேமதாச, இரு கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்களைப் பேணுவதோடு, நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கை ஒப்பந்தங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/samagi-jana-bala-shakti-to-merge-with-united-national-party-sajiths-announcement/">ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி &#8211; சஜித் வெளியிட்ட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் இன்று விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/ranil-makes-special-announcement-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 03:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33098</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும்ஒன்றிணைப்போம்.” – என்ற கருப்பொரு ளில் ஐக்கிய தேசியக் கட்சியின்ஆண்டு விழா இம்முறை இடம்பெறவுள்ளது. மாநாட்டு உரையின்போது ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்கு எதிர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-makes-special-announcement-today/">ரணில் இன்று விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது.</p>
<p>கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>“ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும்ஒன்றிணைப்போம்.” – என்ற கருப்பொரு ளில் ஐக்கிய தேசியக் கட்சியின்ஆண்டு விழா இம்முறை இடம்பெறவுள்ளது.</p>
<p>மாநாட்டு உரையின்போது ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.<br />
இந்த விழாவில் பங்கேற்பதற்கு எதிர ணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், இந்த விழாவில் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவருமான சஜித் பிரேமதாஸபங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரமற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.</p>
<p>கட்சியின் வாழ்த்துச் செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்துமபண்டார இந்த விழாவில் பங்கேற்கச் செல்கின்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-makes-special-announcement-today/">ரணில் இன்று விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐ.தே.க. ஆண்டு விழாவில் சஜித் பங்கேற்கமாட்டார்</title>
		<link>https://oruvan.com/sajith-will-not-participate-in-unps-annual-function/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 10:02:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33046</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் என தெரியவருகின்றது. கட்சியின் வாழ்த்து செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார செல்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கட்சி தலைவர் ரணில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-will-not-participate-in-unps-annual-function/">ஐ.தே.க. ஆண்டு விழாவில் சஜித் பங்கேற்கமாட்டார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார்.</p>
<p>எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் என தெரியவருகின்றது.</p>
<p>கட்சியின் வாழ்த்து செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார செல்கின்றார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறும்.</p>
<p>இவ்விழாவில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sajith-will-not-participate-in-unps-annual-function/">ஐ.தே.க. ஆண்டு விழாவில் சஜித் பங்கேற்கமாட்டார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் தலைமையில் ஐ.தே.க ஆண்டு விழா</title>
		<link>https://oruvan.com/unp-anniversary-celebration-led-by-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 08:26:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32471</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே கடந்த 6ஆம் திகதி நடத்துவதற்குத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-anniversary-celebration-led-by-ranil/">ரணில் தலைமையில் ஐ.தே.க ஆண்டு விழா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே கடந்த 6ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்திருந்தது.</p>
<p>அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-anniversary-celebration-led-by-ranil/">ரணில் தலைமையில் ஐ.தே.க ஆண்டு விழா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐதேக மாநாட்டுக்கு நாள் நிர்ணயம் &#8211; ரணில், சஜித் சங்கமம்?</title>
		<link>https://oruvan.com/date-set-for-unp-conference-ranil-sajith-confluence/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 01:48:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32452</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் குறித்த விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/date-set-for-unp-conference-ranil-sajith-confluence/">ஐதேக மாநாட்டுக்கு நாள் நிர்ணயம் &#8211; ரணில், சஜித் சங்கமம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.</p>
<p>ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் குறித்த விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தது.</p>
<p>அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையிலேயே சிறிகொத்தவில் அல்லாமல் பொது இடத்தில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/date-set-for-unp-conference-ranil-sajith-confluence/">ஐதேக மாநாட்டுக்கு நாள் நிர்ணயம் &#8211; ரணில், சஜித் சங்கமம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</title>
		<link>https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 04:13:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31160</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/">ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு குழுக்களும் ஒரு பொது அரசியல் கூட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொது நிதியை மோசடி செய்ததாக கூறி கடந்த 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சஜித், ரணிலை நேரில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வந்திருந்தார்.</p>
<p>இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது ரணில் தனது கட்சித் தலைமையிலிருந்து விலகுவாரா அல்லது சஜித் பிரேமதாசவை மீண்டும் தனது தலைமையின் கீழ் இணைய அழைப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p>
<p>இந்த அழைப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியில் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,<br />
“தனது கட்சிக்கு கிடைத்த அழைப்பின் பேரில் சஜித் பிரேமதாசவும் மற்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p>
<p>கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.</p>
<p>இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இருப்பினும், மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-sajith-join-the-united-national-party-conference/">ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் &#8211; பின்வாங்கினார் ரணில்</title>
		<link>https://oruvan.com/government-to-remove-privileges-ranil-backtracks/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Aug 2025 07:37:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29753</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்திற்குச் சென்றால் தான் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சிறப்புரிமைகள் இழப்பு தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால், முரண்பாடான உண்மைகளை முன்வைக்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட ஆலோசனையைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-to-remove-privileges-ranil-backtracks/">சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் &#8211; பின்வாங்கினார் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்திற்குச் சென்றால் தான் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.</p>
<p>சிறப்புரிமைகள் இழப்பு தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால், முரண்பாடான உண்மைகளை முன்வைக்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>சிறப்புரிமைகள் குறைப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இதுவரை ஒரு குழுவாகப் பேசவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.</p>
<p>இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுடன் இரண்டு முறை தவிர, குழுக்களை ஒழுங்கமைத்து சிறப்புரிமைகள் சட்டம் குறித்து விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஷயம் குறித்து ஒருமுறை தன்னிடம் பேசியதாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஒரு திருமண விழாவில் சந்தித்து ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.</p>
<p>இதற்கிடையில், கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>கட்சியின் கிளை சங்கங்கள், கிளைகள் மற்றும் மாவட்ட அமைப்புகளை வலுப்படுத்த ஒரு திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.</p>
<p>அரசியல் பிரச்சார பொறிமுறையையும் மனித வளங்களையும் மேம்படுத்துதல், கட்சியை நவீனமயமாக்கும் போது அரசியல் கல்வியை வழங்குதல், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை ஒப்படைத்தல் மற்றும் அவர்களை ஒழுங்கமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p>
<p>செப்டம்பர் ஆறாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவை நடத்தவும், மார்ச் மாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை நடத்தவும், புதிய ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தை நிறுவவும் செயற்குழு முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-to-remove-privileges-ranil-backtracks/">சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் &#8211; பின்வாங்கினார் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள்</title>
		<link>https://oruvan.com/unp-constituency-organizers-engaged-in-an-argument-with-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 11:56:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஐ.தே.க]]></category>
		<category><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14385</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களுக்கும், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நியமனம் பெற்ற உறுப்பினர் ஒருவர் ராஜித சேனாரத்ன தொடர்பில் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை ரணில் விக்ரமசிங்க புறக்கணித்திருந்தார் மேலும், ரணில் விக்ரமசிங்கவிடம் இரு அங்கத்தவர்கள், தாங்கள் நீண்ட நாட்களாக கட்சிக்கு சேவை செய்துள்ளதாகவும் ஆனால் இடையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-constituency-organizers-engaged-in-an-argument-with-ranil/">ரணிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களுக்கும், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது நியமனம் பெற்ற உறுப்பினர் ஒருவர் ராஜித சேனாரத்ன தொடர்பில் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை ரணில் விக்ரமசிங்க புறக்கணித்திருந்தார்<br />
மேலும், ரணில் விக்ரமசிங்கவிடம் இரு அங்கத்தவர்கள், தாங்கள் நீண்ட நாட்களாக கட்சிக்கு சேவை செய்துள்ளதாகவும் ஆனால் இடையில் வருகைதந்த ராஜிதாவை வைத்து முக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ளவது கவலையளிப்பதாக தெரிவித்திருந்தனர்.</p>
<p>இதன்போது ரணில் விக்ரமசிங்க உடனடியாக அவர்களை பேசவிடாது தடுத்து ஆசனத்தில் அமருமாறு பகிரகமாக கூறியுள்ளார்.<br />
மேலும், தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாக எழுந்த ஆட்சேபனைகள் காரணமாக பல தொகுதி அமைப்பாளர்களுக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே சூடான விவாதம் ஏற்பட்டது.</p>
<p>எனினும் முறையான பதில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த உறுப்பினர்கள் இருவரும் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குருதிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-constituency-organizers-engaged-in-an-argument-with-ranil/">ரணிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
