<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கட்டுரை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/category/கட்டுரை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Jun 2026 07:22:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>கட்டுரை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/category/கட்டுரை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</title>
		<link>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["Take Weapons Now]]></category>
		<category><![CDATA[Pay Later" – Admiral Colombage Strips China’s Deadly Mask in Eelam Tamil Genocide]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49501</guid>

					<description><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.</p>
<p><strong>‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்</strong></p>
<p>2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. &#8220;பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?&#8221; என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.</p>
<p>&#8220;இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்&#8221; என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.</p>
<p><strong>அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்</strong></p>
<p>போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.</p>
<p>இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு &#8211; கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p><strong>‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’</strong></p>
<p>&#8220;ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்&#8221; என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.</p>
<p>‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.</p>
<p>போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.</p>
<p><strong>வடக்கு &#8211; கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்</strong></p>
<p>தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு &#8211; கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.</p>
<p>இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.</p>
<p>அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு &#8211; கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.</p>
<p><strong>வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்</strong></p>
<p>நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.</p>
<p>இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.</p>
<p><strong>நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து</strong></p>
<p>கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு &#8211; கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.</p>
<p>தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.</p>
<p>அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.</p>
<p>உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.</p>
<p>சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</title>
		<link>https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[யூரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49463</guid>

					<description><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.</p>
<p>உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.</p>
<p>இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.</p>
<p>அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.</p>
<p>இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.</p>
<p>திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.</p>
<p>அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட &#8216;சுவாப்&#8217; (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.</p>
<p>யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.</p>
<p>குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள &#8216;ஹோர்முஸ் நீரிணை&#8217; வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p>
<p>தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.</p>
<p>போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.</p>
<p>உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.</p>
<p>மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, &#8216;இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்&#8217; என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</title>
		<link>https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:46:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[(El Niño]]></category>
		<category><![CDATA[(National Geographic]]></category>
		<category><![CDATA[Oceana]]></category>
		<category><![CDATA[எல் நினோ]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[நெல்]]></category>
		<category><![CDATA[பேராபத்து]]></category>
		<category><![CDATA[மழைப்பொழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49465</guid>

					<description><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது. இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது.</p>
<p>புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது.</p>
<p>இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது அசுர வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செயற்கைக்கோள் தரவுகள் எச்சரிக்கின்றன.</p>
<p>இதன் விளைவாக, உலகமே அஞ்சிய &#8216;எல் நினோ&#8217; (El Niño) காலநிலை அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக வானிலை மாற்றம் அல்ல &#8211; மாறாக உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள &#8216;போர்ப் பிரகடனம்&#8217; என்றே காலநிலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>ஆய்வாளர்களின் புதிய தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதல், பசிபிக் பெருங்கடலின் இந்த அசாதாரண வெப்ப அலையை மேலும் உந்தித்தள்ளி, வரலாற்றிலேயே மிகக் கொடூரமானதொரு &#8216;சூப்பர் எல் நினோ&#8217; (Super El Niño) பேராபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.</p>
<p><strong>அறிவியலின் இறுதி எச்சரிக்கை</strong></p>
<p>உலகளாவிய கணினி மாதிரிகளின் முன்கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் &#8216;நினோ 3.4&#8217; (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5°C வரை அதிகரிக்கும் என 100 வீதம் உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வழக்கமாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு ஒத்த கருத்துடன் எச்சரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.</p>
<p>இந்த எல் நினோ தீவிரமடைதலானது, இதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் &#8216;நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை&#8217; (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.</p>
<p>இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.</p>
<p>இதன் விளைவாக, உலக வரைபடம் இரு தீவிர எல்லைகளைச் சந்திக்கவுள்ளது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்ரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகவுள்ள நிலையில், மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>வரலாற்றை மிஞ்சும் விபரீதம்</strong></p>
<p>கடந்த காலங்களில் 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட &#8216;சூப்பர் எல் நினோ&#8217; உலகப் பொருளாதாரத்திற்கு மரண அடியைக் கொடுத்ததுடன், பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியது.</p>
<p>மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் கொடிய சூறாவளிகளும் தோன்றின. தற்போதைய பொருளாதாரப் பகுப்பாய்வுகளின்படி, இம்முறை உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்திச் சந்தை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சூழலியல் பாதுகாப்பு அமைப்பான &#8216;ஒசியானா&#8217; (Oceana) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதனால் &#8216;கடலின் நுரையீரல்&#8217; என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழியும் (Coral Bleaching) பேராபத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையவுள்ளது.</p>
<p>கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடித் தொழிற்துறைக்கு இது மீளமுடியாத பேரிடியாக அமையும்.</p>
<p>அத்துடன், பூமியின் மாபெரும் காபன் உறிஞ்சிகளான காடுகள் கருகி, கட்டுக்கடங்காத காட்டுத்தீயை உருவாக்குவதன் மூலம் வளிமண்டல காபன் உமிழ்வு பல மடங்கு அதிகரிக்கும்.</p>
<p><strong>தென்னாசியாவின் நிலை என்ன?</strong></p>
<p>உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்த இரட்டைத் தாக்கத்தின் மிகப்பெரிய பாதிப்பை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த எல் நினோ சுழற்சியானது தென்னாசியப் பிராந்தியத்தின் உயிர்நாடியான தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முற்றாகச் சீர்குலைத்து, மிக மோசமான வறட்சிக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையின் உள்ளூர் காலநிலை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி, மழைப்பொழிவுக் குறைவால் நெல், கோதுமை மற்றும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலை ஆகியவற்றின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பணவீக்கமும், வாழ்வாதாரப் பாதிப்பும் தலைதூக்கும்.</p>
<p>இலங்கையைப் பொறுத்தமட்டில் நீர்மின் உற்பத்தியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடு என்ற ரீதியில், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து கடுமையான மின்சார நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போதால், மனித &#8211; யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.</p>
<p>இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை!</p>
<p>இயற்கையின் இந்த உக்கிரத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து காபன் உமிழ்வைக் குறைப்பதும், உள்நாட்டு அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வளைகுடா நாடுகளின் போரால் அமெரிக்காவுக்கு உண்டாகும் நன்மை</title>
		<link>https://oruvan.com/the-gulf-war-tension-crisis-for-the-world-profit-for-america/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 05:46:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[Crude Oil News]]></category>
		<category><![CDATA[Economic Impacts]]></category>
		<category><![CDATA[Energy Crisis]]></category>
		<category><![CDATA[Global Politics]]></category>
		<category><![CDATA[Gulf War]]></category>
		<category><![CDATA[Oil Market]]></category>
		<category><![CDATA[usa]]></category>
		<category><![CDATA[அமெரிக்க பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உலக அரசியல்]]></category>
		<category><![CDATA[உலக சந்தை]]></category>
		<category><![CDATA[எண்ணெய் அரசியல்]]></category>
		<category><![CDATA[எண்ணெய் வர்த்தகம்]]></category>
		<category><![CDATA[எரிசக்தி சந்தை]]></category>
		<category><![CDATA[எரிபொருள் விலை]]></category>
		<category><![CDATA[கச்சா எண்ணெய்]]></category>
		<category><![CDATA[சர்வதேச செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[போர் பதற்றம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு நாடுகள்]]></category>
		<category><![CDATA[வர்த்தக லாபம்]]></category>
		<category><![CDATA[வளைகுடா நாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48439</guid>

					<description><![CDATA[<p>மாறிவரும் பழைய கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளின் (சவூதி அரேபியா, ஈரான் போன்றவை) எண்ணெய் கிணறுகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் எவராலும் தொட முடியாத ஒரு புனிதமான இடமாக கருதப்பட்டன. ஏனெனில், அங்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அது உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால், இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, 2019-ல் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இந்தத் துறை எவ்வளவு பலவீனமானது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-gulf-war-tension-crisis-for-the-world-profit-for-america/">வளைகுடா நாடுகளின் போரால் அமெரிக்காவுக்கு உண்டாகும் நன்மை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<h3 data-path-to-node="4"><b data-path-to-node="4" data-index-in-node="0">மாறிவரும் பழைய கொள்கை</b></h3>
<p data-path-to-node="5">கடந்த 50 ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளின் (சவூதி அரேபியா, ஈரான் போன்றவை) எண்ணெய் கிணறுகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் எவராலும் தொட முடியாத ஒரு புனிதமான இடமாக கருதப்பட்டன. ஏனெனில், அங்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அது உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால், இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, 2019-ல் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இந்தத் துறை எவ்வளவு பலவீனமானது என்பதை உலகுக்குக் காட்டியது.</p>
<h3 data-path-to-node="6"><b data-path-to-node="6" data-index-in-node="0">அமெரிக்கா ஏன் கவலைப்படுவதில்லை?</b></h3>
<p data-path-to-node="7">பொதுவாக ஒரு நாட்டில் போர் அல்லது குழப்பம் ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள். ஆனால், உலகச் சந்தையில் பதற்றம் ஏற்படும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான இடமாக கருதித் தங்களது பணத்தை <b data-path-to-node="7" data-index-in-node="188">அமெரிக்காவுக்கு</b> கொண்டு செல்கிறார்கள். அமெரிக்கா தற்போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராக இருப்பதால், வெளியில் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைக் கூட்டுகின்றன.</p>
<h3 data-path-to-node="8"><b data-path-to-node="8" data-index-in-node="0">சீனாவும் மற்ற நாடுகளும் சந்திக்கும் சவால்</b></h3>
<p data-path-to-node="9">இலங்கை போன்ற நாடுகள் மற்றும் சீனாவின் உற்பத்தித் துறை ஆகியவை இறக்குமதி செய்யப்படும் எரிபொருளையே நம்பியுள்ளன. எரிபொருள் விநியோகத்தில் ஒரு தடை ஏற்பட்டால் அல்லது விலை உயர்ந்தால், அது இந்த நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். ஆனால், அமெரிக்காவோ தனது சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மற்ற நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் ஒரு பலமான நிலையில் இருக்கிறது.</p>
<h3 data-path-to-node="10"><b data-path-to-node="10" data-index-in-node="0">சுருக்கமாகச் சொன்னால்:</b></h3>
<p data-path-to-node="11">உலகில் எரிபொருள் விநியோகத்தில் குழப்பம் ஏற்படும் போது, மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகப் பலவீனமடைகின்றன. ஆனால், அந்தத் தீயினால் அமெரிக்கா சுடப்படுவதில்லை; மாறாக, அந்த நெருப்பைப் பயன்படுத்தி தனது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்கிறது. பழைய உலக ஒழுங்கு மறைந்து, &#8220;யார் பலமானவர்களோ அவர்கள் பிழைப்பார்கள்&#8221; என்ற புதிய சூழல் உருவாகி வருவதை இது காட்டுகிறது.</p>
<p data-path-to-node="11">The Gulf War Tension: Crisis for the World, Profit for America</p>
<p>The post <a href="https://oruvan.com/the-gulf-war-tension-crisis-for-the-world-profit-for-america/">வளைகுடா நாடுகளின் போரால் அமெரிக்காவுக்கு உண்டாகும் நன்மை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.</title>
		<link>https://oruvan.com/sex-with-a-corpse-is-the-background-to-the-perversions-that-shook-the-world/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 13:18:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[Breaking News Sri Lanka]]></category>
		<category><![CDATA[Criminal Psychology]]></category>
		<category><![CDATA[David Fuller]]></category>
		<category><![CDATA[Forensic Investigation]]></category>
		<category><![CDATA[Global Crime History]]></category>
		<category><![CDATA[Hospital Safety]]></category>
		<category><![CDATA[Human Rights]]></category>
		<category><![CDATA[Justice for Victims]]></category>
		<category><![CDATA[Legal Punishment]]></category>
		<category><![CDATA[Medical Ethics]]></category>
		<category><![CDATA[Mortuary Incident]]></category>
		<category><![CDATA[Necrophilia]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya Hospital]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[Women's Safety]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சித் தகவல்]]></category>
		<category><![CDATA[இலங்கை செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக வரலாறு]]></category>
		<category><![CDATA[சட்ட நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[நுவரெலியா மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[பாலியல் வன்கொடுமை]]></category>
		<category><![CDATA[பிணவறை கொடூரம்]]></category>
		<category><![CDATA[பெண்கள் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[மருத்துவ நிர்வாகம்]]></category>
		<category><![CDATA[மனிதாபிமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46411</guid>

					<description><![CDATA[<p>&#8220;மரணத்திற்குப் பின் மனிதன் அமைதி கொள்கிறான்&#8221; என்பது உலக நியதி. ஆனால், அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் மனித வக்கிரங்கள் பிணவறைக் கதவுகளைத் தாண்டி ஊடுருவுவதுதான் இன்றைய காலத்தின் பெரும் சாபக்கேடு. அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் 23 வயது இளம்பெண்ணின் உடலுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி, வெறும் ஒரு தனிப்பட்ட குற்றமல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஒழுக்க வீழ்ச்சியின் அடையாளம். இத்தகைய &#8216;நெக்ரோஃபிலியா&#8217; (Necrophilia) எனும் பிணத்துடனான பாலியல் வக்கிரங்கள் ஏதோ இன்று நேற்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sex-with-a-corpse-is-the-background-to-the-perversions-that-shook-the-world/">பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="3">&#8220;மரணத்திற்குப் பின் மனிதன் அமைதி கொள்கிறான்&#8221; என்பது உலக நியதி. ஆனால், அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் மனித வக்கிரங்கள் பிணவறைக் கதவுகளைத் தாண்டி ஊடுருவுவதுதான் இன்றைய காலத்தின் பெரும் சாபக்கேடு. அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் 23 வயது இளம்பெண்ணின் உடலுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி, வெறும் ஒரு தனிப்பட்ட குற்றமல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஒழுக்க வீழ்ச்சியின் அடையாளம்.</p>
<p data-path-to-node="4">இத்தகைய &#8216;நெக்ரோஃபிலியா&#8217; (Necrophilia) எனும் பிணத்துடனான பாலியல் வக்கிரங்கள் ஏதோ இன்று நேற்று உருவானவை அல்ல. பண்டைய எகிப்தின் பிரமிடுகள் முதல் நவீன ஐரோப்பாவின் அதிநவீன மருத்துவமனைகள் வரை, வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இத்தகைய வக்கிர புத்தியுள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் உடல் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, அவள் உயிர் பிரிந்த பின்பும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்ற கசப்பான உண்மையை இச்சம்பவங்கள் உரக்கச் சொல்கின்றன.</p>
<p data-path-to-node="5">பிரித்தானியாவின் டேவிட் ஃபுல்லர் முதல் அமெரிக்காவின் கார்ல் டான்ஸ்லர் வரை உலகையே உலுக்கிய இத்தகைய கொடூரங்கள் இப்போது நம் நாட்டிலும் எதிரொலிப்பது நம்மை அச்சமடையச் செய்கிறது. மருத்துவமனைகள் என்பவை புனிதமானவை; அங்குள்ள பிணவறைகள் என்பவை ஒரு மனிதனின் இறுதிப் பயணத்திற்கு முந்தைய கௌரவமான ஓய்விடம். அந்த இடத்திலேயே மனிதம் மரித்துப்போனால், நாம் யாரிடம் நீதி கேட்பது?</p>
<h3 data-path-to-node="5"><b data-path-to-node="5" data-index-in-node="0">1. பண்டைய எகிப்தின் விசித்திரக் கட்டுப்பாடு (கி.மு. 5-ம் நூற்றாண்டு)</b></h3>
<p data-path-to-node="6">வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் <b data-path-to-node="6" data-index-in-node="37">ஹெரோடோட்டஸ் (Herodotus)</b> தனது குறிப்புகளில் ஒரு விசித்திரமான தகவலைப் பதிவிட்டுள்ளார். பண்டைய எகிப்தில், அழகான பெண்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் உடலை உடனடியாக எம்பாமிங் (Embalming) செய்பவர்களிடம் ஒப்படைக்க மாட்டார்கள். காரணம், எம்பாமிங் செய்பவர்கள் அந்த உடலுடன் தகாத முறையில் நடக்கக்கூடும் என்ற பயம் இருந்தது. எனவே, உடல் ஓரளவு அழுகத் தொடங்கிய பிறகே (சுமார் 3-4 நாட்களுக்குப் பின்) அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுமாம்.</p>
<h3 data-path-to-node="10"><b data-path-to-node="10" data-index-in-node="0">2. கார்ல் டான்ஸ்லர் (Carl Tanzler) &#8211; காதலா? வக்கிரமா? (1930கள்)</b></h3>
<p data-path-to-node="11">அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் மருத்துவர், தான் காதலித்த இளம்பெண் காசநோயால் இறந்த பிறகும், அவரது உடலை கல்லறையிலிருந்து திருடி ஏழு ஆண்டுகள் தன் வீட்டிலேயே வைத்திருந்தார். உடலைச் சிதைவடையாமல் காக்க மெழுகு மற்றும் செயற்கைக் கண்களைப் பொருத்தினார். 1940-ல் இது கண்டுபிடிக்கப்பட்டபோது அமெரிக்கா ஸ்தம்பித்தது. ஆனால், வியக்கத்தக்க வகையில் அக்காலச் சட்டங்களில் இதற்குப் போதிய தண்டனை இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.</p>
<h3 data-path-to-node="12"><b data-path-to-node="12" data-index-in-node="0">3. ஜெப்ரி டாமர் (Jeffrey Dahmer) &#8211; மில்வாக்கி அரக்கன் (1990கள்)</b></h3>
<p data-path-to-node="13">அமெரிக்காவின் பிரபல சீரியல் கில்லர் (Serial Killer) ஆன இவர், ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் உடல்களுடன் பாலியல் ரீதியாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருக்கு நீதிமன்றம் சுமார் 941 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.</p>
<h3 data-path-to-node="7"><b data-path-to-node="7" data-index-in-node="0">4. டேவிட் ஃபுல்லர் (David Fuller) &#8211; பிரித்தானியாவின் மிகப்பெரிய அதிர்ச்சி (2021)</b></h3>
<p data-path-to-node="8">நவீன காலத்தில் உலகையே உலுக்கிய சம்பவம் இது. இங்கிலாந்தில் ஒரு மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றிய டேவிட் ஃபுல்லர், 1987 முதல் 2020 வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களைப் பிணவறையில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார்.</p>
<ul data-path-to-node="9">
<li>
<p data-path-to-node="9,0,0"><b data-path-to-node="9,0,0" data-index-in-node="0">கண்டுபிடிக்கப்பட்டது:</b> பழைய கொலை வழக்குகளை டிஎன்ஏ (DNA) மூலம் விசாரித்தபோது இவர் சிக்கினார். இவரது வீட்டில் சோதனை செய்தபோது, பிணவறையில் அவர் செய்த கொடூரங்களை வீடியோ எடுத்து வைத்திருந்த ஆதாரங்கள் சிக்கின.</p>
</li>
<li>
<p data-path-to-node="9,1,0"><b data-path-to-node="9,1,0" data-index-in-node="0">தாக்கம்:</b> இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள அனைத்து மருத்துவமனை பிணவறைகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) கட்டாயமாக்கப்பட்டன.</p>
</li>
</ul>
<p>The post <a href="https://oruvan.com/sex-with-a-corpse-is-the-background-to-the-perversions-that-shook-the-world/">பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?</title>
		<link>https://oruvan.com/if-winston-churchill-were-alive-today-how-would-he-handle-iran/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 11:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்]]></category>
		<category><![CDATA[அரசியல் வரலாறு]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகப்போர்]]></category>
		<category><![CDATA[சர்வதேச உறவுகள்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[பாமரனுக்கும் புரியும் தமிழ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அரசியல்]]></category>
		<category><![CDATA[ராஜதந்திரம்]]></category>
		<category><![CDATA[வரலாற்றுப் பார்வை]]></category>
		<category><![CDATA[வின்ஸ்டன் சர்ச்சில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46329</guid>

					<description><![CDATA[<p>இன்றைய உலக அரசியலில் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இன்று உயிருடன் இருந்தால் இந்தச் சிக்கலை எப்படி கையாண்டிருப்பார் என்பது குறித்து ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பார்வை இங்கே தரப்பட்டுள்ளது. சர்ச்சில் ஏன் இங்கே பேசப்படுகிறார்? அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்ச்சிலின் துணிச்சலான போக்கைத் தற்போதைய தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறுகின்றனர். சர்ச்சில் ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-winston-churchill-were-alive-today-how-would-he-handle-iran/">இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்றைய உலக அரசியலில் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் <b data-path-to-node="3" data-index-in-node="140">வின்ஸ்டன் சர்ச்சில்</b> இன்று உயிருடன் இருந்தால் இந்தச் சிக்கலை எப்படி கையாண்டிருப்பார் என்பது குறித்து ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பார்வை இங்கே தரப்பட்டுள்ளது.</p>
<h3 data-path-to-node="4">சர்ச்சில் ஏன் இங்கே பேசப்படுகிறார்?</h3>
<p data-path-to-node="5">அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்ச்சிலின் துணிச்சலான போக்கைத் தற்போதைய தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறுகின்றனர். சர்ச்சில் ஒரு போர்வீரராகவும், தைரியமான முடிவுகளை எடுப்பவராகவும் பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.</p>
<h3 data-path-to-node="6">சர்ச்சிலின் உண்மையான குணம் என்ன?</h3>
<p data-path-to-node="7">வரலாற்றுப் பேராசிரியர்களின் கருத்துப்படி, சர்ச்சில் வெறும் சண்டையை மட்டும் விரும்பியவர் அல்ல. அவரது அணுகுமுறை மூன்று முக்கிய தூண்களைக் கொண்டது:</p>
<ol start="1" data-path-to-node="8">
<li>
<p data-path-to-node="8,0,0"><b data-path-to-node="8,0,0" data-index-in-node="0">பலம் (Strength):</b> எதிரிகளை எதிர்கொள்ள இராணுவ பலம் அவசியம் என்று நம்பினார்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,1,0"><b data-path-to-node="8,1,0" data-index-in-node="0">ராஜதந்திரம் (Diplomacy):</b> போரை விட பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவே முதலில் முயன்றார்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,2,0"><b data-path-to-node="8,2,0" data-index-in-node="0">கூட்டணி (Alliances):</b> குறிப்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதையே அவர் முக்கியமாகக் கருதினார்.</p>
</li>
</ol>
<h3 data-path-to-node="9">ஈரானுடனான சர்ச்சிலின் கசப்பான வரலாறு</h3>
<p data-path-to-node="10">1953 ஆம் ஆண்டு ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் <b data-path-to-node="10" data-index-in-node="60">முகமது மொசாடிக்</b> என்பவரைப் பதவியிலிருந்து நீக்க பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒரு இரகசிய சதியை (Coup) செய்தன. இதற்கு சர்ச்சில் முழு ஆதரவு வழங்கினார்.</p>
<p data-path-to-node="11">ஆனால், அன்று சர்ச்சில் செய்த அந்தத் தலையீடுதான் இன்றுவரை ஈரானிய மக்கள் மேற்கத்திய நாடுகளைப் பகை உணர்வுடன் பார்க்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பது ஒரு வரலாற்று முரண்பாடாகும்.</p>
<h3 data-path-to-node="12">இன்று சர்ச்சில் இருந்தால் என்ன செய்வார்?</h3>
<p data-path-to-node="13">அவர் இன்று இருந்தால் ஒருவேளை பின்வருவனவற்றைச் செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்:</p>
<ul data-path-to-node="14">
<li>
<p data-path-to-node="14,0,0">ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களை அவர் சந்தேகத்துடனேயே பார்த்திருப்பார்.</p>
</li>
<li>
<p data-path-to-node="14,1,0">ஆனாலும், போர் என்பது எப்போதுமே நாம் நினைக்கும் பாதையில் செல்லாது என்பதை அவர் அனுபவ ரீதியாக அறிந்தவர். போர் ஒருமுறை தொடங்கிவிட்டால், அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத விபரீதங்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்திருந்தார்.</p>
</li>
<li>
<p data-path-to-node="14,2,0">எனவே, பலத்தைக் காட்டிக்கொண்டே ஈரானுடன் ஒரு நியாயமான உடன்படிக்கையை ஏற்படுத்தவே அவர் முயன்றிருப்பார்.</p>
</li>
</ul>
<h3 data-path-to-node="15">நாம் புரிந்துகொள்ள வேண்டியது</h3>
<p data-path-to-node="16">சர்ச்சிலை ஒரு &#8220;போர் விரும்பி&#8221;யாக மட்டும் பார்ப்பது தவறு. அவர் ஒரு மிகச்சிறந்த தந்திரசாலி. இன்றைய சூழலில் அவர் இருந்தால், ஈரானின் கடந்த கால வலிகளைப் புரிந்துகொண்டு, அதேசமயம் உலக அமைதியைக் காக்க பேச்சுவார்த்தை மேசைக்கே முன்னுரிமை அளித்திருப்பார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-winston-churchill-were-alive-today-how-would-he-handle-iran/">இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8220;ஏன் இவ்வளவு மழை? &#8211; மேகங்களின் புதிய முகத்தை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகள்.&#8221;</title>
		<link>https://oruvan.com/why-so-much-rain-scientists-reveal-new-face-of-clouds/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 11:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[Climate Change]]></category>
		<category><![CDATA[Clumping Clouds]]></category>
		<category><![CDATA[Environmental Science]]></category>
		<category><![CDATA[Flash Floods]]></category>
		<category><![CDATA[Global Warming]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[Meteorology]]></category>
		<category><![CDATA[Science News]]></category>
		<category><![CDATA[Weather News Tamil]]></category>
		<category><![CDATA[அதிசய மேகங்கள்]]></category>
		<category><![CDATA[ஆராய்ச்சி]]></category>
		<category><![CDATA[இயற்கை சீற்றம்]]></category>
		<category><![CDATA[ஒன்று திரளும் மேகங்கள்]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[காலநிலை மாற்றம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[புவி வெப்பமடைதல்]]></category>
		<category><![CDATA[மேகங்கள்]]></category>
		<category><![CDATA[வானிலை கணிப்பு]]></category>
		<category><![CDATA[வானிலை மாற்றம்]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46326</guid>

					<description><![CDATA[<p>அண்மைக்காலமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, திடீரெனக் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் எதிர்பாராத வெள்ளப்பெருக்குகள் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. இதற்குப் பின்னால் உள்ள ஒரு விசித்திரமான காரணத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். அதுதான் &#8220;ஒன்று திரளும் மேகங்கள்&#8221; (Clumping Clouds). என்ன நடக்கிறது வானத்தில்? பொதுவாக மேகங்கள் வானத்தில் பரவலாகக் காணப்படும். ஆனால், தற்போது விஞ்ஞானிகள் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-so-much-rain-scientists-reveal-new-face-of-clouds/">&#8220;ஏன் இவ்வளவு மழை? &#8211; மேகங்களின் புதிய முகத்தை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகள்.&#8221;</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மைக்காலமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, திடீரெனக் கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் எதிர்பாராத வெள்ளப்பெருக்குகள் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. இதற்குப் பின்னால் உள்ள ஒரு விசித்திரமான காரணத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். அதுதான் <b data-path-to-node="3" data-index-in-node="326">&#8220;ஒன்று திரளும் மேகங்கள்&#8221; (Clumping Clouds).</b></p>
<h3 data-path-to-node="4">என்ன நடக்கிறது வானத்தில்?</h3>
<p data-path-to-node="5">பொதுவாக மேகங்கள் வானத்தில் பரவலாகக் காணப்படும். ஆனால், தற்போது விஞ்ஞானிகள் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் மேகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக நெருக்கமாக, ஒரு கொத்து போல ஒன்று சேருகின்றன.</p>
<p data-path-to-node="6">இவ்வாறு மேகங்கள் ஒன்று திரளும்போது, அவை ஒரு ராட்சத சக்தியைப் பெறுகின்றன. இதன் விளைவாக:</p>
<ul data-path-to-node="7">
<li>
<p data-path-to-node="7,0,0">மிகக் குறுகிய நேரத்தில், ஒரு பெரிய பிரதேசமே மூழ்கும் அளவுக்குக் <b data-path-to-node="7,0,0" data-index-in-node="64">கனமழை</b> பெய்கிறது.</p>
</li>
<li>
<p data-path-to-node="7,1,0">இந்த மழையினால் ஏற்படும் <b data-path-to-node="7,1,0" data-index-in-node="24">வெள்ளப்பெருக்கு</b>, நாம் சாதாரணமாக எதிர்பார்க்கும் அளவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.</p>
</li>
</ul>
<h3 data-path-to-node="8">ஏன் விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்?</h3>
<p data-path-to-node="9">பழைய காலநிலைக் கணிப்பு முறைகளின்படி (Models), பூமி வெப்பமடையும் போது இவ்வளவு அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை. ஆனால், உண்மையில் நடப்பது வேறாக இருக்கிறது.</p>
<p data-path-to-node="10">உதாரணமாக, அர்ஜென்டினாவில் 2018-ல் வெறும் 12 மணித்தியாலங்களுக்குள் ஒரு வருடத்திற்குப் பெய்ய வேண்டிய மழை கொட்டித் தீர்த்தது. இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பது நீண்ட நாட்களாக ஒரு மர்மமாகவே இருந்தது.</p>
<h3 data-path-to-node="11">&#8220;மேகங்களுக்கு ஒரு உள்மனது உண்டு!&#8221;</h3>
<p data-path-to-node="12">இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி கரோலின் முல்லர் என்பவர், <b data-path-to-node="12" data-index-in-node="59">&#8220;மேகங்களுக்கு ஒரு உள் வாழ்க்கை (Internal life) இருக்கிறது&#8221;</b> என்று கூறுகிறார். அதாவது, மேகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தங்களைத்தாங்களே வலுப்படுத்திக் கொள்கின்றன.</p>
<p data-path-to-node="13">சுற்றியுள்ள காற்றைச் சூடாக்குவதன் மூலமும், ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலமும் இந்த மேகக்கூட்டங்கள் நீண்ட நேரம் மழையைத் தரக்கூடிய வலிமையைப் பெறுகின்றன. இது ஒரு காலிஃபிளவர் பூ விரிவது போல வானத்தில் படர்ந்து கொள்கிறது.</p>
<h3 data-path-to-node="14">இதனால் நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?</h3>
<p data-path-to-node="15">இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இது ஒரு முக்கியமான எச்சரிக்கையாகும்.</p>
<ol start="1" data-path-to-node="16">
<li>
<p data-path-to-node="16,0,0"><b data-path-to-node="16,0,0" data-index-in-node="0">கணிக்க முடியாத மழை:</b> வானிலை அவதானிப்பு நிலையங்கள் கணிப்பதை விட, இந்த &#8216;ஒன்று திரளும் மேகங்கள்&#8217; மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.</p>
</li>
<li>
<p data-path-to-node="16,1,0"><b data-path-to-node="16,1,0" data-index-in-node="0">திடீர் வெள்ளம்:</b> வறண்ட நிலத்தில் கூட, இந்த மேகங்களால் சில நிமிடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p>
</li>
<li>
<p data-path-to-node="16,2,0"><b data-path-to-node="16,2,0" data-index-in-node="0">விவசாயப் பாதிப்பு:</b> சீரற்ற இந்த மழைப்பொழிவு விவசாய நிலங்களை அழித்து, உணவு உற்பத்தியைப் பாதிக்கும்.</p>
</li>
</ol>
<h3 data-path-to-node="17">விஞ்ஞானிகளின் அடுத்த கட்டம்</h3>
<p data-path-to-node="18">தற்போதுள்ள சாதாரண கணினிகளால் இந்த மேகங்களின் விசித்திரமான போக்கைக் கணிக்க முடிவதில்லை. இதற்காக, சாதாரண கணினிகளை விட 30,000 மடங்கு அதிகத் திறன் கொண்ட சூப்பர் கணினிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் புதிய வரைபடங்களை உருவாக்கி வருகின்றனர்.</p>
<p data-path-to-node="19">வரும் ஆண்டுகளில் ஏவப்படவுள்ள புதிய செயற்கைக்கோள்கள் மூலம், இந்த மேகங்கள் எப்படி உருவாகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-so-much-rain-scientists-reveal-new-face-of-clouds/">&#8220;ஏன் இவ்வளவு மழை? &#8211; மேகங்களின் புதிய முகத்தை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகள்.&#8221;</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்</title>
		<link>https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 04:59:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Women's Day]]></category>
		<category><![CDATA[வடக்கு - கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46300</guid>

					<description><![CDATA[<p>ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்&#8230; இலங்கையின் வடக்கு &#8211; கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்த தம் உறவுகளுக்காகவும், மறுக்கப்பட்ட நீதிக்காகவும் வீதியோரக் கொட்டகைகளில் இன்றும் ஓயாது போராடும் வலிமை மிக்க பெண்களின் குரல்களை உலகம் கேட்கத் தவறிவிட்டதா? கண்ணீரை ஆயுதமாக்கி, நீதியைத் தேடி அலையும் அந்தத் தாய்மார்கள் மற்றும் கணவனைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/">கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்&#8230;</p>
<p>இலங்கையின் வடக்கு &#8211; கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்த தம் உறவுகளுக்காகவும், மறுக்கப்பட்ட நீதிக்காகவும் வீதியோரக் கொட்டகைகளில் இன்றும் ஓயாது போராடும் வலிமை மிக்க பெண்களின் குரல்களை உலகம் கேட்கத் தவறிவிட்டதா?</p>
<p>கண்ணீரை ஆயுதமாக்கி, நீதியைத் தேடி அலையும் அந்தத் தாய்மார்கள் மற்றும் கணவனைப் பறி கொடுத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியலை மையப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் நீதிக்காகப் போராடும் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக ஆதவன் வானொலியின் செய்திப் பிரிவு வழங்கும் &#8216;விசேட தொகுப்பு&#8217; இது..</p>
<p>இன்று சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளும், வெற்றிகளும் கொண்டாடப்படும் வேளையில், ஈழத் திருநாட்டின் வடக்கு &#8211; கிழக்குப் பகுதிகளில் மௌனமான, ஆனால் வலிமையான ஒரு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமல்ல; இது இழந்த தங்கள் உறவுகளுக்காகவும், பறிபோன நீதிக்காகவும் வீதியில் இறங்கிப் போராடும் பெண்களின் குரல்.</p>
<p>முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், அந்த யுத்தம் பெண்களுக்குத் தந்த பரிசு &#8216;கைம்மை&#8217;. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் யுத்தத்தினால் கணவனைப் பறி கொடுத்த சுமார் 90,000-க்கும் அதிகமான பெண்கள் இன்று தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கிறார்கள்.</p>
<p>நேற்றுவரை வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று தங்கள் குடும்பத்தைக் காக்கவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வயல்களிலும், ஆலைகளிலும் வியர்வை சிந்துகிறார்கள். சமூகக் கட்டமைப்பு மாற்றமடைந்தாலும், &#8220;கணவனை இழந்தவள்&#8221; என்ற சமூகப் பார்வை இவர்களை இன்னும் காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.</p>
<p>யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் வீதியோரங்களில் அமர்ந்து கண்ணீர் மல்கப் போராடும் பெண்களை நீங்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் காணலாம். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.</p>
<p>தங்கள் கைகளில் மகனின் அல்லது கணவனின் புகைப்படத்தை ஏந்தியபடி, &#8220;எங்கள் உறவுகள் எங்கே?&#8221; என்று இவர்கள் கேட்கும் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.</p>
<p>இந்தத் தாய்மார்களில் பலர், நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போதே உயிரைத் துறந்துவிட்டார்கள். போராட்டக் களத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மறைந்த செய்திகள் நம் மனதை உலுக்குகின்றன. சர்வதேச மகளிர் தினத்தில் இவர்களுக்கான நீதி எங்கே என்ற கேள்வி இன்றும் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது.</p>
<p>யுத்தத்தின் வடுக்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தப் பெண்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. நுண்கடன் என்ற பெயரில் சிக்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், இன்று அந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை வரை தள்ளப்படும் அவலம் தொடர்கிறது.</p>
<p>தனது குடும்பத்தைப் பராமரிக்க வழியின்றி, அன்றாடத் தேவைக்காகப் போராடும் இந்தப் பெண்களுக்கு முறையான வாழ்வாதாரத் திட்டங்களோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனைகளோ போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.</p>
<p>ஆனாலும், இந்தப் பெண்கள் சோர்ந்துவிடவில்லை. நில மீட்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி, வடக்கு &#8211; கிழக்கில் பெண்களே இன்று முன்னிலையில் நிற்கிறார்கள். கேப்பாபுலவு முதல் முள்ளிவாய்க்கால் வரை நீதிக்கான தீபத்தை ஏந்தியிருப்பது இவர்கள்தான்.</p>
<p>இலங்கையின் வரலாற்றில் பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டுமன்றி, சமூகத்தின் அரசியல் மற்றும் நீதித்துறை மாற்றங்களுக்கான முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபிக்கின்றன.</p>
<p>சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் வாழ்த்துகளுடன் முடிந்துவிடக் கூடாது. வடக்கு &#8211; கிழக்கில் நீதிக்காகப் போராடும் இந்தப் பெண்களின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானது பரிதாபமல்ல, அங்கீகாரம் மற்றும் நீதி. அவர்களின் போராட்டம் வெற்றிபெறும் நாளில்தான் உண்மையான மகளிர் தினம் அர்த்தப்படும்.</p>
<p>நீதிக்காகப் போராடும் அனைத்துத் தமிழ் பெண்களின் உறுதிக்கும் oruvan  இணையத்தளத்தின் வீர வணக்கங்கள்</p>
<p>&nbsp;</p>
<p>தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா</p>
<p>The post <a href="https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/">கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போரின் விளிம்பில்: அமெரிக்கா &#8211; ஈரான் மோதலின் முழுப்பின்னணி</title>
		<link>https://oruvan.com/on-the-brink-of-war-the-full-background-of-the-us-iran-conflict/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Mar 2026 04:18:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Ayatollah Ruhollah Khomeini]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Hezbollah]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Jewish Lobby]]></category>
		<category><![CDATA[Shah Mohammad Reza Pahlavi]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் - ஈரான் போர்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46207</guid>

					<description><![CDATA[<p>உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால அரசியல் சதுரங்கம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என நகரும் இந்த மோதலின் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதல்கள்? விரிவாகப் பார்ப்போம். ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/on-the-brink-of-war-the-full-background-of-the-us-iran-conflict/">போரின் விளிம்பில்: அமெரிக்கா &#8211; ஈரான் மோதலின் முழுப்பின்னணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால அரசியல் சதுரங்கம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என நகரும் இந்த மோதலின் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதல்கள்? விரிவாகப் பார்ப்போம்.</p>
<p>ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கலாம். 1950-களில் ஈரானை ஆட்சி செய்த <strong>Mohammad Reza Shah Pahlavi</strong>, அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காதான் ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தையே வழங்கியது. ஆனால், இந்த இணக்கமான பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.</p>
<p>இந்த நட்பு 1979-ல் தலைகீழாக மாறியது. ஷா மன்னர் திணித்த மேற்கத்திய கலாசாரம் மற்றும் <strong>&#8216;SAVAK&#8217;</strong> எனும் ரகசியப் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த ஈரானியப் புரட்சியால், மன்னர் பதவியிறக்கப்பட்டு, <strong>அயதுல்லா கொமேனி</strong> தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்தது.</p>
<p>புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஷா மன்னரை மீண்டும் ஈரானிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு, 52 அதிகாரிகளை 444 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு &#8216;ஆறாத வடுவாக&#8217; மாறி, இரு நாடுகளையும் பரம எதிரிகளாக்கியது.</p>
<p><strong>ஈரான் அணு ஆயுதம்</strong> தயாரிப்பதே கடந்த 20 ஆண்டுகால உலக அரசியலின் மையப்புள்ளி. 2025-ஆம் ஆண்டு மே மாதம், ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இப்போது மீண்டும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அழித்துவிட்டதாகச் சொன்ன கிடங்குகள் ஓராண்டுக்குள் மீண்டும் எப்படி வந்தன? அன்று அமெரிக்கா சொன்னது பொய்க்கணக்கா அல்லது ஈரானின் இரகசிய தொழில்நுட்பம் அவ்வளவு வலிமையானதா?</p>
<p>இங்கேதான் அரசியல் சதுரங்கத்தின் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் அரங்கேறியது. 2026 பிப்ரவரி 26-ஆம் திகதி, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வைத்து இரு நாடுகளுக்கும் இடையே ரகசிய சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை வெற்றி என அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள், பிப்ரவரி 28 அதிகாலையில் அமெரிக்கா ஈரானின் முக்கிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. சமாதானம் பேசிக்கொண்டே ஈரானை ரகசியமாகச் சுற்றி வளைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஒரு திட்டமிட்ட &#8216;<strong>தந்திரோபாய ஏமாற்று வேலை</strong>&#8216; என்றே பார்க்கப்படுகிறது.</p>
<p>தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையிலும், அமெரிக்கா ஏன் இஸ்ரேலுக்காக ஈரானுடன் இத்தனை பெரிய மோதலில் ஈடுபட்டுள்ளது? இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன</p>
<p><strong>பாதுகாப்பு ஒப்பந்தம்:</strong> மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரே ஜனநாயகக் கூட்டாளி இஸ்ரேல் மட்டுமே. அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரிக்க முடியாத அங்கம்.</p>
<p><strong>ஈரானின் அச்சுறுத்தல்:</strong> &#8216;இஸ்ரேல் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்&#8217; என்பது ஈரானின் நிலைப்பாடு. ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஈரானிய ஆதரவு அமைப்புகளை முடக்க ஈரானை வீழ்த்துவது அமெரிக்காவின் வியூகம்.</p>
<p><strong>அமெரிக்க உள்நாட்டு அரசியல்:</strong> அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க &#8216;Jewish Lobby&#8217; அமைப்புகளின் அழுத்தம், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க வைக்கிறது.</p>
<p>2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி முடங்கியதால் விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்புவதே அமெரிக்காவின் நோக்கம்.</p>
<p>உண்மையில், ஈரானில் உள்ள ஒருசாரார் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும், பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவின் இந்தத் தலையீடு தங்களது இறையாண்மைக்கு எதிரானது எனக் கருதி வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். அமெரிக்கா எதிர்பார்த்த உள்நாட்டுப் போர் ஏற்படவில்லை, மாறாக மக்கள் தேசப்பற்றுடன் அமெரிக்காவின் வியூகங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.</p>
<p>தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது பதுங்கு குழிகளுக்குச் செல்லாமல், தனது அலுவலகத்திலிருந்தே தாக்குதல்களை எதிர்கொண்டு அங்கேயே உயிர்நீத்தார். கமேனியின் மறைவுக்குப் பின் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா போட்ட கணக்கு பொய்த்துப் போனது. மாறாக, கமேனியின் மரணம் ஈரானிய மக்களிடையே ஒரு புதிய அக்னியை மூட்டியுள்ளது.</p>
<p>இலங்கைக்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் &#8216;<strong>IRIS Dena</strong>&#8216; மீதான அமெரிக்கத் தாக்குதல், இந்தப் போரை இந்தியப் பெருங்கடலுக்கும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 60 சதவீத எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கடல்சார் காப்பீட்டுத் தொகைகள் 500 சதவீதம் உயர்ந்துள்ளன.</p>
<p>அமெரிக்காவின் பலமும் ஈரானின் விடாப்பிடித் தனமும் இன்று மத்திய கிழக்கை ஒரு எரிமலையாக மாற்றியுள்ளது. 47 ஆண்டுகாலப் பகை இன்று ஒரு புதிய உலகப் போருக்கு வித்திடுமா அல்லது அமைதியில் முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/on-the-brink-of-war-the-full-background-of-the-us-iran-conflict/">போரின் விளிம்பில்: அமெரிக்கா &#8211; ஈரான் மோதலின் முழுப்பின்னணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை சுகாதாரத்துறையில் 30 ஆண்டுகால நம்பிக்கையான பயணம்: Technomedics நிறுவனத்தின் சாதனை மைல்கல்</title>
		<link>https://oruvan.com/30-years-of-confident-journey-in-sri-lankan-healthcare-technomedics-companys-achievement-milestone/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Feb 2026 07:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[30 Years of Excellence]]></category>
		<category><![CDATA[Future of Healthcare]]></category>
		<category><![CDATA[Health Tech]]></category>
		<category><![CDATA[Healthcare Development]]></category>
		<category><![CDATA[Healthcare Innovation]]></category>
		<category><![CDATA[Healthcare Partnership]]></category>
		<category><![CDATA[Hospital Equipment]]></category>
		<category><![CDATA[Medical Advancements SL]]></category>
		<category><![CDATA[Medical Equipment Supplier]]></category>
		<category><![CDATA[Medical Solutions]]></category>
		<category><![CDATA[Medical Technology]]></category>
		<category><![CDATA[Saving Lives]]></category>
		<category><![CDATA[Sri Lanka Business]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economy]]></category>
		<category><![CDATA[Sri Lanka Healthcare]]></category>
		<category><![CDATA[Sri Lanka Medical]]></category>
		<category><![CDATA[Sujith Samaradiwakara]]></category>
		<category><![CDATA[Technomedics]]></category>
		<category><![CDATA[Technomedics 30 Years]]></category>
		<category><![CDATA[Trusted Healthcare]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45590</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் முன்னோடி நிறுவனமான Technomedics, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது 30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை நிறைவு செய்துள்ளது. 1994 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க மூலோபாய பங்காளராக உருவெடுத்துள்ளது. மருத்துவத்துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம் Technomedics வெறும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமாக மட்டுமன்றி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவத் தீர்வுகளை இலங்கைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/30-years-of-confident-journey-in-sri-lankan-healthcare-technomedics-companys-achievement-milestone/">இலங்கை சுகாதாரத்துறையில் 30 ஆண்டுகால நம்பிக்கையான பயணம்: Technomedics நிறுவனத்தின் சாதனை மைல்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="3">இலங்கையின் மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் முன்னோடி நிறுவனமான <b data-path-to-node="3" data-index-in-node="73">Technomedics</b>, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது 30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை நிறைவு செய்துள்ளது.</p>
<p data-path-to-node="4">1994 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க மூலோபாய பங்காளராக உருவெடுத்துள்ளது.</p>
<h3 data-path-to-node="5">மருத்துவத்துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம்</h3>
<p data-path-to-node="6">Technomedics வெறும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமாக மட்டுமன்றி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவத் தீர்வுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைக்கிறது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதுடன், மருத்துவ நிபுணர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது.</p>
<h3 data-path-to-node="7">சவால்களை வென்ற நம்பிக்கை</h3>
<p data-path-to-node="8">கடந்த மூன்று தசாப்தங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின் போது, Technomedics ஒரு தூணாக நின்று செயற்பட்டுள்ளது:</p>
<ul data-path-to-node="9">
<li>
<p data-path-to-node="9,0,0"><b data-path-to-node="9,0,0" data-index-in-node="0">கொவிட்-19 பேரிடர்:</b> தொற்றுநோய் காலத்தில் நாட்டின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்பட்டது.</p>
</li>
<li>
<p data-path-to-node="9,1,0"><b data-path-to-node="9,1,0" data-index-in-node="0">பொருளாதார சவால்கள்:</b> நாட்டின் பொருளாதார நெருக்கடிகளின் போதும் தடையற்ற மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தியது.</p>
</li>
<li>
<p data-path-to-node="9,2,0"><b data-path-to-node="9,2,0" data-index-in-node="0">பொருளாதார பங்களிப்பு:</b> ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்கள் மற்றும் புதிய வணிகக் கொள்வனவுகள் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்த்து வருகிறது.</p>
</li>
</ul>
<p data-path-to-node="11,0">&#8220;உயிர்களை வளப்படுத்துவதும், ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதும் தான் எமது பிரதான நோக்கம். கடந்த 30 ஆண்டுகளாக எம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் மருத்துவ வல்லுநர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எமது நன்றிகள். எதிர்காலத்திலும் புத்தாக்கங்கள் மற்றும் ஊழியர்களின் மேம்பாட்டிற்காக நாம் தொடர்ந்து முதலீடு செய்வோம்.&#8221;</p>
<p data-path-to-node="11,1">— <b data-path-to-node="11,1" data-index-in-node="2">சுஜித் சமரதிவாகர</b>, ஸ்தாபகர் மற்றும் குழுமத் தலைவர், Technomedics International.</p>
<h3 data-path-to-node="13">எதிர்கால நோக்கு</h3>
<p data-path-to-node="14">Technomedics நிறுவனம் தனது வெற்றியை வெறும் எண்களால் மட்டும் அளவிடாமல், அது காப்பாற்றிய உயிர்கள் மற்றும் மாற்றியமைத்த மருத்துவத் தரநிலைகள் மூலமாகவே அளவிடுகிறது. நெறிமுறை சார்ந்த வணிகப் பண்புகள் மற்றும் நம்பகத்தன்மையுடன், எதிர்காலத்தில் இலங்கையை சுகாதாரப் பராமரிப்பில் ஒரு முன்னோடி நாடாக மாற்ற நிறுவனம் உறுதியளித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/30-years-of-confident-journey-in-sri-lankan-healthcare-technomedics-companys-achievement-milestone/">இலங்கை சுகாதாரத்துறையில் 30 ஆண்டுகால நம்பிக்கையான பயணம்: Technomedics நிறுவனத்தின் சாதனை மைல்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
