<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Turkey Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/turkey/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/turkey/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 29 Apr 2025 09:13:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Turkey Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/turkey/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது &#8211; துருக்கிய ஜனாதிபதி</title>
		<link>https://oruvan.com/the-world-cannot-afford-another-war-turkish-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 09:13:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[Turkish President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18876</guid>

					<description><![CDATA[<p>உலகம் இன்னொரு போரை தாங்கிக்கொள்ள முடியாது என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர். இந்தப் பிராந்தியத்தில் மோதலை தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் எர்டோகன் மறுத்தார். அங்காராவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்ன பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு மாறுவதற்கு முன்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-world-cannot-afford-another-war-turkish-president/">இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது &#8211; துருக்கிய ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகம் இன்னொரு போரை தாங்கிக்கொள்ள முடியாது என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர். இந்தப் பிராந்தியத்தில் மோதலை தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் எர்டோகன் மறுத்தார்.</p>
<p>அங்காராவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்ன பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு மாறுவதற்கு முன்பு தணிக்கப்பட வேண்டும்.</p>
<p>இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.</p>
<p>துருக்கிய விமானப்படை 7 C-130 ஹெர்குலஸ் விமானங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின.</p>
<p>இந்த விமானங்களில் ஆறு விமானங்கள் கராச்சியிலும், ஒரு விமானம் இஸ்லாமாபாத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.</p>
<p>ஆனால் துருக்கி இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்தது.</p>
<p>இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கடுமையாக சாடியது.<br />
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா.வின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வலையமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் இந்தியா இந்த விமர்சனத்தை எழுப்பியது.</p>
<p>பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்குவிக்கும் நாடு என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-world-cannot-afford-another-war-turkish-president/">இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது &#8211; துருக்கிய ஜனாதிபதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துருக்கி ஹோட்டல் தீ விபத்து&#8230;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு</title>
		<link>https://oruvan.com/turkey-hotel-fire-death-toll-rises-to-76/</link>
		
		<dc:creator><![CDATA[T Sinduja]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 11:16:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[76dead]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7855</guid>

					<description><![CDATA[<p>துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள போலு மாகாணத்தில் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ஹோட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இத் தீ விபத்தில் சுமார் 66 பேர் உயிரிழந்ததோடு 51 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/turkey-hotel-fire-death-toll-rises-to-76/">துருக்கி ஹோட்டல் தீ விபத்து&#8230;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள போலு மாகாணத்தில் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ஹோட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>இத் தீ விபத்தில் சுமார் 66 பேர் உயிரிழந்ததோடு 51 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.</p>
<p>காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் இதுவரையில் 45 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இவ் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/turkey-hotel-fire-death-toll-rises-to-76/">துருக்கி ஹோட்டல் தீ விபத்து&#8230;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/12-killed-in-explosion-in-turkey/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 10:25:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karesi district]]></category>
		<category><![CDATA[Recep Tayyip Erdogan]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[Turkish President]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3810</guid>

					<description><![CDATA[<p>வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து &#8220;எங்கள் 12 சகோதரர்களின் மரணத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்&#8221; என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், தெரிவித்துள்ளார். &#8220;எனது இறந்த சகோதரர்கள் மீது கருணை காட்டவும், அவர்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/12-killed-in-explosion-in-turkey/">துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடமேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தை அடுத்து &#8220;எங்கள் 12 சகோதரர்களின் மரணத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்&#8221; என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;எனது இறந்த சகோதரர்கள் மீது கருணை காட்டவும், அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்&#8221; என்று எர்டோகன் மேலும் கூறினார்.</p>
<p>வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேதியியல், இயந்திர, தொழில் பாதுகாப்பு மற்றும் புவி இயற்பியல் பொறியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க்தெரிவித்தார்.</p>
<p>அந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/12-killed-in-explosion-in-turkey/">துருக்கியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
