<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sri lanka Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sri-lanka/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 28 Apr 2026 12:44:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>sri lanka Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sri-lanka/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா</title>
		<link>https://oruvan.com/sri-lanka-cricket-president-shammi-silva-resigns/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 12:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[resigns]]></category>
		<category><![CDATA[Shammi Silva]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49181</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-cricket-president-shammi-silva-resigns/">ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்</p>
<p>இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.</p>
<p>இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது.</p>
<p>இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>அத்துடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-cricket-president-shammi-silva-resigns/">ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</title>
		<link>https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:57:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[GDP]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48765</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும். 2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும்.</p>
<p>2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது.</p>
<p>இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 4,372 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>2022ம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பொருளாதார ரீதியாகத் திவாலான நாடாக அறிவிக்கப்பட்டபோது, ​​அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,464 டொலராக பதிவாகியிருந்தது.</p>
<p>தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை, அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும்.</p>
<p>இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உற்பத்தித் திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankas-gdp-per-capita-rises-by-us5000/">இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 07:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48762</guid>

					<description><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். நோய் எதிர்ப்புத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது.</p>
<p>இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது.</p>
<p>தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p>
<p>இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/increase-in-life-expectancy-of-sri-lankans/">இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 07:28:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48597</guid>

					<description><![CDATA[<p>மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, &#8216;கிளீன் ஸ்ரீலங்கா&#8217; திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 10 நவீன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/">மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p>
<p>போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, &#8216;கிளீன் ஸ்ரீலங்கா&#8217; திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p>
<p>அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.</p>
<p>இப்பேருந்துகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.</p>
<p>33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்தச் சேவையானது மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</p>
<p>மேலும், இந்த போக்குவரத்து வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால், சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/modern-low-floor-bus-services-from-makumpura-to-commence-tomorrow/">மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</title>
		<link>https://oruvan.com/government-offices-will-operate-as-usual/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 04:46:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48364</guid>

					<description><![CDATA[<p>அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-offices-will-operate-as-usual/">அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.</p>
<p>தமிழ மற்றும் சிங்கள புத்தாண்டு காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று (15) முதல் பேருந்துகளை இயக்கத் தொடங்குவதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயல்திட்டப் பணிப்பாளர் ஷெரீன் அதுகொரலா தெரிவித்தார்.</p>
<p>எவ்வாறாயினும், இன்று ஒரு வழக்கமான அலுவலக நாள் என்பதால், அலுவலக இரயில் சேவைகள் வழக்கம் போல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>பயணிகளின் தேவையின் அடிப்படையில் உரிய இரயில்கள் சேவையில் இணைக்கபட்டுள்ளதாக இரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-offices-will-operate-as-usual/">அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்</title>
		<link>https://oruvan.com/hotline-introduced-to-report-careless-drivers/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Apr 2026 11:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[careless]]></category>
		<category><![CDATA[drivers]]></category>
		<category><![CDATA[driving]]></category>
		<category><![CDATA[introduced]]></category>
		<category><![CDATA[number]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[whatsapp]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48291</guid>

					<description><![CDATA[<p>அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய &#8216;WhatsApp&#8217; இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணொளிகளை அனுப்பும் போது, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/hotline-introduced-to-report-careless-drivers/">கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய &#8216;WhatsApp&#8217; இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p>இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த காணொளிகளை அனுப்பும் போது, சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/hotline-introduced-to-report-careless-drivers/">கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய கோவிட் திரிபு &#8211; உஷார் நிலையில் இலங்கை</title>
		<link>https://oruvan.com/new-covid-strain-sri-lanka-on-high-alert/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 08:49:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Covid - 19]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[சிகாடா]]></category>
		<category><![CDATA[புதிய கோவிட் திரிபு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47851</guid>

					<description><![CDATA[<p>பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, சிகாடா என அறியப்படும் இந்த மாறுபாடு, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் குறைந்தது 23 நாடுகளில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்றுகள் குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-covid-strain-sri-lanka-on-high-alert/">புதிய கோவிட் திரிபு &#8211; உஷார் நிலையில் இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, சிகாடா என அறியப்படும் இந்த மாறுபாடு, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.</p>
<p>பின்னர் குறைந்தது 23 நாடுகளில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், வெளிநாடுகளில் பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்றுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருப்பதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையில் சமீபத்தில் புதிய வகை தொற்றோ அல்லது வேறு எந்த வகை தொற்றோ பதிவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனினும், வழக்கமான பொது சுகாதாரக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக பாதுகாப்பு முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-covid-strain-sri-lanka-on-high-alert/">புதிய கோவிட் திரிபு &#8211; உஷார் நிலையில் இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/request-to-use-electricity-economically/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 05:14:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Electricity Board]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47636</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார்.</p>
<p>அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/request-to-use-electricity-economically/">மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது</title>
		<link>https://oruvan.com/sri-lanka-released-45-days-of-fuel-in-nine-days-as-qr-system-becomes-mandatory/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 07:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[45 Days]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[Mandatory]]></category>
		<category><![CDATA[QR]]></category>
		<category><![CDATA[released]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[System]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46888</guid>

					<description><![CDATA[<p>ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு 57,000 மெட்ரிக் டொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில், 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்திற்கொண்டு, அரசாங்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-released-45-days-of-fuel-in-nine-days-as-qr-system-becomes-mandatory/">45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.</p>
<p>மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள்<br />
மூலம் பொதுமக்களுக்கு 57,000 மெட்ரிக் டொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p>
<p>அதே காலகட்டத்தில், 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்திற்கொண்டு, அரசாங்கம் அனைத்து வாகனங்களுக்கும் QR எரிபொருள் விநியோக முறையை கட்டாயமாக்கியுள்ளது.</p>
<p>QR முறையின் கீழ், ஒவ்வொரு நபரும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு ஒரு நிலையான ஒதுக்கீட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>திருத்தப்பட்ட QR எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர்களுக்கு உரிமை உண்டு. முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் 15 லீற்றர்களைப் பெறலாம், வேன்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்கள் 40 லீற்றர்களைப் பெறலாம்.</p>
<p>லொறிகளுக்கு 200 லீற்றர்களுக்கும், பேருந்துகள் 60 லீற்றர்களுக்கும் உரிமை உண்டு.</p>
<p>இதனிடையே, பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை திருத்தியமைக்கவும், நிலையான ஒதுக்கீட்டிலிருந்து விலகி, பயணித்த தூரத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த திருத்தப்பட்ட முறை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபை மூலம் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னர் QR எரிபொருள் அமைப்பின் கீழ் பதிவு செய்த நபர்களுக்கு, வாகன உரிமையில் அல்லது பதிவுசெய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசி எண்களில் எந்த மாற்றங்களும் இல்லாத பட்சத்தில், fuelpass.gov.lk வலைத்தளம் மூலம் QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்.</p>
<p>முன்னர் பதிவு செய்யாதவர்களுக்கும், உரிமையாளர் விபரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை மாற்றிய வாகன உரிமையாளர்களுக்கும், fuelpass.gov.lk வலைத்தளம் புதிதாக பதிவு செய்ய அல்லது மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>வாகனங்கள் அல்லது தொலைபேசி எண்களை மாற்றிய நபர்களையும், புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்தவர்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-released-45-days-of-fuel-in-nine-days-as-qr-system-becomes-mandatory/">45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது &#8211; அருண்</title>
		<link>https://oruvan.com/sri-lanka-fuel-prices-still-below-2024-levels-deputy-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Mar 2026 05:20:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[2024]]></category>
		<category><![CDATA[below levels]]></category>
		<category><![CDATA[Deputy Minister]]></category>
		<category><![CDATA[fuel]]></category>
		<category><![CDATA[prices]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46370</guid>

					<description><![CDATA[<p>உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய சூழலில், கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர்களாக இருந்தபோது, ​​பெட்ரோல் 92 லீற்றருக்கு 371 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-fuel-prices-still-below-2024-levels-deputy-minister/">எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது &#8211; அருண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.</p>
<p>எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய சூழலில், கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர்களாக இருந்தபோது, ​​பெட்ரோல் 92 லீற்றருக்கு 371 ரூபாவாகவும், டீசல் 363 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 262 ரூபாவாகவும் இருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.</p>
<p>தற்போதைய உலகளாவிய நிலைமை மிகவும் சவாலானது என்றும், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய எரிசக்தி விநியோக வழிகளைப் பாதித்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர் 100 இற்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதை விட உள்நாட்டு எரிபொருள் விலைகளை இலங்கையால் குறைவாக வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.</p>
<p>உலகளாவிய எரிசக்தி நிலையற்ற தன்மையால் உருவாக்கப்பட்ட அழுத்தங்களை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும், நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிசெய்து நிலைமையை கவனமாக நிர்வகிக்கும் என்றும் ஹேமசந்திரா மேலும் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-fuel-prices-still-below-2024-levels-deputy-minister/">எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது &#8211; அருண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
