<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka President Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/sri-lanka-president/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/sri-lanka-president/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 17 Feb 2025 02:10:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Sri Lanka President Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/sri-lanka-president/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</title>
		<link>https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 02:10:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Budget 2025]]></category>
		<category><![CDATA[Harini]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sri Lanka Government Budget 2025]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10753</guid>

					<description><![CDATA[<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்காக நாடாளுமன்றம் இன்று (17) காலை 10:30 மணிக்கு கூடும். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி திசாநாயக்கவும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எதிர்வரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/">புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும்.</p>
<p>ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரைக்காக நாடாளுமன்றம் இன்று (17) காலை 10:30 மணிக்கு கூடும்.</p>
<p>2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.</p>
<p>அதன்படி, ஜனாதிபதி திசாநாயக்கவும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் எதிர்வரும் ஆண்டிற்கான முக்கிய நிதி முன்னுரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கிடையில், ‘X’ தளப் பதிவில், ஜனாதிபதி திசாநாயக்க “முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை இயக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்திற்கு உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கான தயாரிப்பாக, வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் இறுதி கட்டங்கள் குறித்த முதற்கட்ட விவாதம் சமீபத்தில் ஜனாதிபதி திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.</p>
<p>ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்த விவாதம் பிப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்றது, இதில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>கடந்த ஜனவரி ஒன்பதாம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டு மசோதாவை சமர்ப்பித்தார்.</p>
<p>ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) இன்று (17) நடைபெறும், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.</p>
<p>இதைத் தொடர்ந்து, இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.</p>
<p>ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறும். மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.</p>
<p>வரவுச் செலவு விவாதக் காலத்தில், காலை 9:30 மணி முதல் காலை 10:00 மணி வரை வாய்மொழி பதில்களுக்கான ஐந்து கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அதே நேரத்தில் விவாதம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.</p>
<p>கூடுதலாக, பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆகிய திகதிகளில் வாக்கெடுப்பு நடைபெறும் நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாலை 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒத்திவைப்பு நேரப் பிரேரணைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-new-government-presents-its-first-budget-today/">புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</title>
		<link>https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jan 2025 08:09:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5016</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது. அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார். மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஒரு பிரபலமான தலைவராக மாறியுள்ளார். அவர் பலரால் நேசிக்கப்படுகின்றார்.</p>
<p>மேலும் தேசியக் கட்சிகளின் பெருகிய ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது கட்சியை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது தலைமை திறனை நிரூபித்துள்ளதுடன் ஒரு வலுவான அரசியல் நபராகவும் உருவெடுத்துள்ளார்.</p>
<p><strong>தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அநுர?</strong></p>
<p>தனது ஆட்சியில் முதல் 100 நாட்களுக்குள் அதிகாரத்தை நிறுவி, மக்களின் ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்குப் பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுரகுமார் பிபிசிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், சில வாரங்களுக்குள் தனது அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட நாடாளுமன்றின் முதல் சபாநாயகரை இழந்த போதிலும், தொடர்ந்து ஒரு வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி வழிநடத்தி வருகின்றார்.</p>
<p>சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நிறைவேற்றப்படாத சில நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்ற பிக்கர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறிபத்த வழக்கை விசாரிக்க கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இரண்டு மூத்த புலனாய்வாளர்களை நியமித்தார்.</p>
<p>மேலும், விசாரணைகள் குறித்து கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தி தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும, அவர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.</p>
<p>பிள்ளையான் என்று பிரபலமாக அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டார்.</p>
<p>கூடுதலாக, வரி ஏய்ப்பு செய்ததற்காக அர்ஜுன் அலோசியஸ் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்து வந்தவர்கள் விரைவாக பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், மெண்டிஸ் டிஸ்டில்லரீஸின் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.</p>
<p><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></p>
<p>அநுரவின் ஆட்சியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, மேலும் பங்குச் சந்தையில் 40 வீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் இராஜதந்திர முயற்சிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அவரது வெளிநாட்டு உறவுகள் பெரும்பாலும் சுமூகமாக நடந்துள்ளன.</p>
<p>இருப்பினும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனினும் அந்தப் பிரச்சியை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.</p>
<p>மேலும், பொலிஸ்மா அதிபர், தலைமை நீதிபதி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.</p>
<p><strong>ஊழல் எதிர்ப்பு முயற்சிகள்</strong></p>
<p>ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட &#8220;க்ளீன் ஸ்ரீலங்கா&#8221; வேலைத் திட்டம் பலரிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளதுடன் பரவலான ஆதரவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அநுரவின் தலைமைத்துவம் அதிர்ச்சியூட்டும் சீர்திருத்தங்கள் உட்பட தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சிலர் கணித்திருந்தாலும், அவர் படிப்படியாக ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>எனினும், இதனை மெதுவான வேகம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மாற்றத்தின் அளவிடப்பட்ட வேகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.</p>
<p><strong>அநுர முன் உள்ள சவால்கள்</strong></p>
<p>சந்தேகத்திற்கு இடமின்றி, இனப் பிளவுகளை சரிசெய்வதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்போது ஜனாதிபதி அநுரகுமார ஏராளமான முக்கியமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>இதன்படி, வேறூன்றி போயிருக்கும் ஊழலை ஒழிப்பதும், சில அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதும் எளிதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>மேலும், அநுரகுமாரவின் குழுவினர் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் சில பகுதிகளில் இன்னும் அனுபவம் போதவில்லை எனவும் இது வெளிப்படையாக தெரிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார மக்களின் ஆதரவுடன் தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார், ஆனால் இப்போது அவர் அரசியல் உயரடுக்கின் சிக்கலான இயக்கவியலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-anura-kumara-and-the-past-100-days/">ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</title>
		<link>https://oruvan.com/presidents-new-years-message/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 02:49:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2025]]></category>
		<category><![CDATA[anura]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[New Year Wishes]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka President]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4811</guid>

					<description><![CDATA[<p>மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-new-years-message/">ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>“நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.</p>
<p>வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது.</p>
<p>அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.</p>
<p>கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.</p>
<p>அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p>
<p>இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம்.</p>
<p>அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி, புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.</p>
<p>சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது.</p>
<p>விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது.</p>
<p>இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.</p>
<p>தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-new-years-message/">ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
