<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>pakistan Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/pakistan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/pakistan/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 25 Apr 2026 06:06:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>pakistan Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/pakistan/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்</title>
		<link>https://oruvan.com/irans-foreign-minister-reportedly-not-planning-to-meet-us-officials-in-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Apr 2026 06:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[meet]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[plan]]></category>
		<category><![CDATA[US - Iranian]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49089</guid>

					<description><![CDATA[<p>ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், இஸ்லாமாபாத் ஒரு இடைநிலை பாலமாக செயல்பட முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையெ, நேரடி பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரானின் நிலைப்பாட்டை முன்னிட்டு, அமெரிக்கா தனது தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/irans-foreign-minister-reportedly-not-planning-to-meet-us-officials-in-pakistan/">ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், இஸ்லாமாபாத் ஒரு இடைநிலை பாலமாக செயல்பட முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இதனிடையெ, நேரடி பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரானின் நிலைப்பாட்டை முன்னிட்டு, அமெரிக்கா தனது தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.</p>
<p>அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தான் சென்றடைந்தார். ஈரான்–பாகிஸ்தான் இருதரப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதே இந்த பயணத்தின் நோக்கம் என பாகிஸ்தானிலுள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஈரானிய தரப்புகளின் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தவுள்ளதாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்த சந்திப்புகள் சுமூகமாக இடம்பெற்றால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/irans-foreign-minister-reportedly-not-planning-to-meet-us-officials-in-pakistan/">ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்</title>
		<link>https://oruvan.com/jd-vance-heads-to-pakistan-for-fresh-talks/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Apr 2026 05:26:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[fresh]]></category>
		<category><![CDATA[JD Vance]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[talks]]></category>
		<category><![CDATA[ஈரானுடன்]]></category>
		<category><![CDATA[புதிய சுற்றுப் பேச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48582</guid>

					<description><![CDATA[<p>ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை மாலை அந்த குழு இஸ்லாமாபாத்தை சென்றடையும் என்றும் அவர் கூறினார். இதேவேளை, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்ட ட்ரம்பின் ஆலோசகர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jd-vance-heads-to-pakistan-for-fresh-talks/">ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது சமூக ஊடகப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>திங்கள்கிழமை மாலை அந்த குழு இஸ்லாமாபாத்தை சென்றடையும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>இதேவேளை, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p>
<p>முந்தைய பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்ட ட்ரம்பின் ஆலோசகர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெறுவார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும் தெஹ்ரான் தனது பங்கேற்பை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்கத் தடை அமுலில் இருக்கும் வரை அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இறுதிப் பேச்சுவார்த்தைகள் சுமார் 21 மணித்தியாலங்கள் நீடித்தன. ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் வொஷிங்டனும் தெஹ்ரானும் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்ததால், அமைதி ஒப்பந்தம் தோல்வியுற்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/jd-vance-heads-to-pakistan-for-fresh-talks/">ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் &#8211; அமெரிக்கா அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/iran-and-the-united-states-have-agreed-to-a-two-week-ceasefire/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 04:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Benjamin Netanyahu]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Iran ceasefire deal]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48136</guid>

					<description><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்காவின் வெற்றி எனவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க செய்துள்ளனர் எனவும் கரோலின் லீவிட் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக &#8220;ஒபரேஷன் எபிக் ஃபியூரி&#8221; என்பது நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கும் ஒரு நடவடிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-and-the-united-states-have-agreed-to-a-two-week-ceasefire/">ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் &#8211; அமெரிக்கா அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p>
<p>இது அமெரிக்காவின் வெற்றி எனவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார்கள் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க செய்துள்ளனர் எனவும் கரோலின் லீவிட் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஈரானுக்கு எதிராக &#8220;ஒபரேஷன் எபிக் ஃபியூரி&#8221; என்பது நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கும் ஒரு நடவடிக்கை என்று ஜனாதிபதி தொடக்கத்திலிருந்தே கூறிவந்ததாக கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் அமெரிக்கா 38 நாட்களில் தனது முக்கிய இராணுவ இலக்குகளை அடைந்து, அவற்றை விஞ்சியும் செயல்பட்டது&#8221; என்றும் கரோலின் லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி போர் தொடுத்திருந்தது.</p>
<p>இதனையடுத்து முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஈரானின் இந்த நடவடிக்கையினால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.</p>
<p>அத்துடன், இஸ்ரேலையும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளையும் குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தது.</p>
<p>இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்பொல்லா அமைப்பினரும் போரில் களம் இறங்கியிருந்தனர்.</p>
<p>ஹார்முஸ் நீரிணை வழியாக முன்னெடுக்கப்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் உலக நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தன.</p>
<p>உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்த நிலையில், பல நாடுகளில் கடும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டது.</p>
<p>இந்நிலையில், ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எவ்வாறாயினும், ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீள திறக்க வேண்டும் எனவும், அணு சக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>அவ்வாறு இல்லையெனில் ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவேன் எனவும், ஈரான் ஒரு போதும் மீண்டு வாராது எனவும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p>
<p>இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலையுடன் ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த காலகெடு முடிவடைந்திருந்த நிலையில், ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் நிலவியிருந்தது.</p>
<p>அத்துடன், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் பொது மக்கள் நேற்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>ஈரான் முழுவதும் உள்ள முக்கிய பாலங்கள் மற்றும் மின் நிலையங்களில் மக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>போர்க் குற்றவாளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்குத் தாங்கள் அஞ்சவில்லை என்றும், அதனால் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான இடங்களுக்கு வந்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இந்த போராட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>போர் பதற்றம் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.</p>
<p>இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இரண்டு வார கால போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.</p>
<p>பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் மீதான பேரழிவுத் தாக்குதலை இன்று இரவு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், டிரம்ப் தனது பதிவில், &#8216;ஈரான் நாடு&#8217; என்பதற்கு மாற்றாக &#8216;ஈரானிய இஸ்லாமியக் குடியரசு&#8217; என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.</p>
<p>ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.</p>
<p>ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதாகவும், இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக அமையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அனைத்து இராணுவ இலக்குகளையும் நாம் அடைந்து, அவற்றை விடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதோடு, மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்கும் ஈரானுடனான நீண்டகால அமைதி குறித்த தெளிவான உடன்படிக்கையை நோக்கி வெகுதூரம் முன்னேறியுள்ளோம் என்பதே இந்த முடிவிற்கான காரணம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டிள்ளார்.</p>
<p>ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு தமக்குக் கிடைத்ததாகவும், அதனைப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியமான அடிப்படையாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்திலும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து முடிக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.</p>
<p>அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையிலும், மத்திய கிழக்கு நாடுகளின் சார்பாகவும், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது தனக்கு பெருமையாகும் என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டிருந்த நிலையில், ஈரானிய அரச தொலைக்காட்சி அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை வெற்றியாகக் காட்டி அறிவித்துள்ளது.</p>
<p>அந்த ஒளிபரப்பில், ஆக்கிரமிப்பு செய்யாமை, தடைகளை நீக்குதல் மற்றும் அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, இஸ்ரேலும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஈரான் மீது குதாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளிலும் இணையும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>எவ்வாறாயினும், போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானுக்குப் பொருந்தாது என்றும், லெபனான் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-and-the-united-states-have-agreed-to-a-two-week-ceasefire/">ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் &#8211; அமெரிக்கா அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அபாய கட்டத்தில் ஈரான் போர் &#8211; உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு</title>
		<link>https://oruvan.com/iran-war-at-risk-plan-for-immediate-ceasefire-handed-over/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 10:37:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[donald trump]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[ஈரான் போர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48050</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அமைதித் திட்டம் இரு தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-war-at-risk-plan-for-immediate-ceasefire-handed-over/">அபாய கட்டத்தில் ஈரான் போர் &#8211; உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அமைதித் திட்டம் இரு தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .</p>
<p>பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.</p>
<p>செவ்வாய்க்கிழமை இறுதிக்குள் உடன்பாடு ஒன்றுக்கு வராவிட்டால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p>
<p>எனினும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியப் போவதில்லை என உறுதியான இருக்கும் ஈரான் ஹார்முஸ் நீரிணையை உடனடியான திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.</p>
<p>இந்நிலையிலேயே, தற்காலிகமாக &#8216; இஸ்லாமாபாத் ஒப்பந்தம்&#8217; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு இரு தரப்பினருக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சமாதானத் திட்டம், உடனடி போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து 15-20 நாட்களுக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இரு கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் &#8220;இரவு முழுவதும்&#8221; பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் நீரிணையை மீளவும் திறக்காது என்றும், இந்த முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருவதால் காலக்கெடுவை ஏற்காது என்றும் மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டரஸ் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தயார்நிலை அமெரிக்காவிடம் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களை விடுவிப்பது குறித்துஒரு உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .</p>
<p>மேலும், சீனா , துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்த அமைதி முன்னெடுப்பிற்குப் பங்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/iran-war-at-risk-plan-for-immediate-ceasefire-handed-over/">அபாய கட்டத்தில் ஈரான் போர் &#8211; உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 05:23:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[400 killed]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46914</guid>

					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/">பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.</p>
<p>தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில்<br />
நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது.</p>
<p>ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், காபூலும் நங்கர்ஹார் மாகாணத்திலும் உள்ள இராணுவ இலக்குகளை மட்டுமே தங்களது படைகள் இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/afghanistan-says-400-killed-in-pakistan-attack/">பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான்  அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆப்கான் &#8211; பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு</title>
		<link>https://oruvan.com/afghan-pakistan-war-breaks-out/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 03:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[Pak Afghan war]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45876</guid>

					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை நடத்தியது. பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு இராணுவ ஸ்டேஷன்கள் ஆப்கன் வசமாகியுள்ளன. அத்துடன், பல வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆப்கான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/afghan-pakistan-war-breaks-out/">ஆப்கான் &#8211; பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p>
<p>இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை நடத்தியது. பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும், பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு இராணுவ ஸ்டேஷன்கள் ஆப்கன் வசமாகியுள்ளன. அத்துடன், பல வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இதற்கிடையே ஆப்கான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியது.</p>
<p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது.</p>
<p>காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.</p>
<p>பாகிஸ்தான், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.</p>
<p>தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக &#8216;ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்&#8217; என்ற நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.</p>
<p>ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இதுவே இருநாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்க காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/afghan-pakistan-war-breaks-out/">ஆப்கான் &#8211; பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி</title>
		<link>https://oruvan.com/pakistan-team-coming-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 08:29:45 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[Sports News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39873</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஜனவரி ஏழு, ஒன்பது மற்றும் 11ஆம் திகதிகளில்  தம்புளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அணிக்கு மதிப்பு மிக்க பயிற்சியை இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-team-coming-to-sri-lanka/">இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த போட்டிகள் அனைத்தும் ஜனவரி ஏழு, ஒன்பது மற்றும் 11ஆம் திகதிகளில்  தம்புளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.</p>
<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அணிக்கு மதிப்பு மிக்க பயிற்சியை இந்த தொடர் வழங்கும் என பாகிஸ்தான கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.</p>
<p>டி20 உலகக் கிண்ண தொடரின் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் இலங்கையிலேயே விளையாடவுள்ளது.  இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.</p>
<p>அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி முத்தரப்பு டி20 போட்டித் தொடரில் விளையாடி இருந்தது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை தனதாக்கியிருந்தது.</p>
<p>இலங்கை அணிக்கு எதிரான போட்டியை தவிர உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.</p>
<p>டி20 உலகக் கிண்ண தொடரில் குழு ஏ இல் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது.</p>
<p>மேலும், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளுக்கு எதிராக குழு நிலை போட்டிகளில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-team-coming-to-sri-lanka/">இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு உதவி &#8211; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி</title>
		<link>https://oruvan.com/help-for-sri-lanka-pakistani-aircraft-allowed-to-use-indian-airspace/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 03:24:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39747</guid>

					<description><![CDATA[<p>பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்வெளியை பயன்படுத்த நேற்று திங்கட்கிழமை அனுமதி கோரும் விண்ணப்பம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே கோரிக்கையின் நோக்கம் என்பதால், இந்தியா இந்த கோரிக்கையை விரைவாக செயல்படுத்தியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி, நான்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/help-for-sri-lanka-pakistani-aircraft-allowed-to-use-indian-airspace/">இலங்கைக்கு உதவி &#8211; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>வான்வெளியை பயன்படுத்த நேற்று திங்கட்கிழமை அனுமதி கோரும் விண்ணப்பம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.</p>
<p>இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே கோரிக்கையின் நோக்கம் என்பதால், இந்தியா இந்த கோரிக்கையை விரைவாக செயல்படுத்தியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான அனுமதி, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை பயன்படுத்த மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதனை முற்றிலும் மறுத்துள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/help-for-sri-lanka-pakistani-aircraft-allowed-to-use-indian-airspace/">இலங்கைக்கு உதவி &#8211; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் &#8211; 12 பேர் பலி</title>
		<link>https://oruvan.com/suicide-bomb-attack-in-pakistan-12-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 10:53:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Islamabad bomb blast]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[pakistan news]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37992</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடிப்பு மதியம் 12:39 மணிக்கு நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்தார், மேலும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வானாவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attack-in-pakistan-12-killed/">பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் &#8211; 12 பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>இந்த வெடிப்பு மதியம் 12:39 மணிக்கு நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்தார், மேலும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.</p>
<p>ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வானாவில் உள்ள ஒரு கேடட் கல்லூரிக்குள் ஆயுதமேந்திய போராளிகள் இரவு முழுவதும் தாக்குதல் நடத்த முயன்றதை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் முறியடித்ததாக சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், பாகிஸ்தான் &#8220;போர் நிலையில்&#8221; இருப்பதாகக் கூறிய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இன்றைய தாக்குதலை &#8220;விழித்தெழுப்புவதற்கான அழைப்பாக&#8221; எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.</p>
<p>குண்டுவெடிப்பு நடந்தபோது தலைநகரில் உள்ள நீதிமன்றம் கூட்டமாக இருந்ததாகவும், இதனால் பலர் காயமடைந்ததாகவும் இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>தாக்குதலில் காயமடைந்தவர்கள் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attack-in-pakistan-12-killed/">பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் &#8211; 12 பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</title>
		<link>https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 14:35:10 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[attitude]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[teams]]></category>
		<category><![CDATA[unhappy]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33921</guid>

					<description><![CDATA[<p>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது மங்களுக்கு அவமரியாதை இல்லை என கூறிய அவர் அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கியதாகவும் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/">இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p>
<p>இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது மங்களுக்கு அவமரியாதை இல்லை என கூறிய அவர் அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கியதாகவும் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை என சுட்டிக்காட்டிய அவர் மக்கள் தங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்தே கிண்ணத்தை வாங்குவது முறை எனவும் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி பெற்றுக்கொள்வீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/pakistan-is-very-unhappy-with-the-indian-teams-attitude/">இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
