<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Operation Sindoor Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/operation-sindoor/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/operation-sindoor/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 15 May 2025 06:11:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Operation Sindoor Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/operation-sindoor/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒபரேஷன் சிந்தூர் &#8211; பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்</title>
		<link>https://oruvan.com/operation-sindh-heavy-damage-to-the-pakistan-air-force/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 15 May 2025 06:11:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[India - Pakistan]]></category>
		<category><![CDATA[Operation Sindoor]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20317</guid>

					<description><![CDATA[<p>காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒபரேஷன் சிந்தூருடன் இணைந்த இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்பில் சுமார் 20 வீதம் அழித்ததாகவும், அந்நாட்டின் பல போர் விமானங்களை சேதப்படுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதன்படி, பாகிஸ்தான் விமானப்படையின் F-16 மற்றும் JF-17 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா மற்றும் போலாரி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindh-heavy-damage-to-the-pakistan-air-force/">ஒபரேஷன் சிந்தூர் &#8211; பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>ஒபரேஷன் சிந்தூருடன் இணைந்த இந்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் விமானப்படையின் உள்கட்டமைப்பில் சுமார் 20 வீதம் அழித்ததாகவும், அந்நாட்டின் பல போர் விமானங்களை சேதப்படுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p>
<p>அதன்படி, பாகிஸ்தான் விமானப்படையின் F-16 மற்றும் JF-17 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா மற்றும் போலாரி உள்ளிட்ட வெடிமருந்து கிடங்குகள் மற்றும் விமான தளங்கள் போன்ற முக்கியமான இடங்கள் இந்திய தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் உள்ள போலாரி விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் கடுமையானது எனவும், பாகிஸ்தான் விமானப்படை ஸ்க்வாட்ரான் தலைவர் உஸ்மான் யூசுப் மற்றும் நான்கு விமானப்படை வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படையின் பல விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p>
<p>சிந்தூர் நடவடிக்கையின் கீழ், இந்தியப் படைகள் பரந்த அளவிலான பாகிஸ்தான் இராணுவத் தளங்களைத் தாக்கின.</p>
<p>இதன்படி, ரஃபிகி, முரிட், ஸ்கர்டு, போலாரி, சுக்கூர், சியால்கோட், பஸ்ரூர், நூர் கான், சுனியன், சர்கோதா மற்றும் ஜகோபாபாத் ஆகிய விமானத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஜகோபாபாத்தில் உள்ள ஷாபாஸ் விமானப்படை தளத்தில் குறிப்பிடத்தக்க அழிவை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindh-heavy-damage-to-the-pakistan-air-force/">ஒபரேஷன் சிந்தூர் &#8211; பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்</title>
		<link>https://oruvan.com/colonel-sophia-qureshi-who-led-operation-sindoor-against-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 08:58:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Operation Sindoor]]></category>
		<category><![CDATA[Sofiya Qureshi]]></category>
		<category><![CDATA[Sophia Qureshi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19612</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா குரேஷி நிலைமையை விளக்கியிருந்தார். கர்னல் சோபியா குரேஷி இந்திய இராணுவத்தின் சிக்னல்கள் படைப்பிரிவில் ஒரு மூத்த அதிகாரி. குஜராத்தைச் சேர்ந்த சோபியா, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டதாரி ஆவார். சோபியாவும் ஒரு இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தாத்தா இந்திய இராணுவத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/colonel-sophia-qureshi-who-led-operation-sindoor-against-pakistan/">பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<p>பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா குரேஷி நிலைமையை விளக்கியிருந்தார்.</p>
<p>கர்னல் சோபியா குரேஷி இந்திய இராணுவத்தின் சிக்னல்கள் படைப்பிரிவில் ஒரு மூத்த அதிகாரி. குஜராத்தைச் சேர்ந்த சோபியா, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.</p>
<p>சோபியாவும் ஒரு இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தாத்தா இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். அவரது கணவரும் இந்திய இராணுவத்தில் உறுப்பினராக உள்ளார்.</p>
<p>2006 ஆம் ஆண்டில், சோபியா ஐ.நா. அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாக பணியாற்றினார்.</p>
<p>அவர் ஐ.நா.வில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 2016 ஆம் ஆண்டு ஆசியான் பிளஸ் இராணுவப் பயிற்சியில் குரேஷி இந்தியாவை வழிநடத்தினார்.</p>
<p>இறுதியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் இந்திய இராணுவம் பெண் சக்தியான சோபியா குரேஷியை பயன்படுத்தியது.</p>
<p>பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாக இராணுவம் அறிவித்தது.</p>
<p>ஒபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் இராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும் இராணுவம் தெளிவுபடுத்தியது.</p>
<p>இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/colonel-sophia-qureshi-who-led-operation-sindoor-against-pakistan/">பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</title>
		<link>https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 02:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India-Pakistan War]]></category>
		<category><![CDATA[Operation Sindoor]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Pahalgam Attack]]></category>
		<category><![CDATA[Pahalgam terror attack]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19554</guid>

					<description><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/">போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p>
<p>தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>அகமதுபூர் கிழக்கு நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.</p>
<p>இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.</p>
<p>கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது.</p>
<p>பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.</p>
<p>மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் வெடிக்கும் என்ற நிலைப்பாடு உருவாகியது. இதனையடுத்து இரு நாடுகளும் இந்த விடயத்தில் பொறுமையை கடைப்பிடிக்குமாறு உலக நாடுகளும் வலியுறுத்தியிருந்தன.</p>
<p>நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று (ஏழாம் திகதி) போர் கால ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.</p>
<p>இந்நிலையிலேயே, இன்று அதிகாலை ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.</p>
<p>இந்தியப் படைகள் மூன்று இடங்களில் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானைத் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.</p>
<p>பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.</p>
<p>இதனிடையே, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்றும் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p>
<p>இன்று அதிகாலை, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பீம்பர் காலி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>பிராந்தியத்தின் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.</p>
<p>காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் மூன்று இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/operation-sindoor-india-launches-missile-attack-on-pakistan/">போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
