<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>India Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/india/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/india/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>India Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/india/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</title>
		<link>https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 05:07:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Terrorism]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பஹல்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48703</guid>

					<description><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.</p>
<p>கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான கொடூரச் சம்பவத்தை நாடு ஒருபோதும் மறக்காது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் நடத்திய &#8216;Operation Sindoor&#8217; மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p>
<p>லஷ்கர்-ஏ-தொய்பாவின் (Lashkar-e-Taiba) கிளை அமைப்பான TRF நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-will-not-succumb-to-any-form-of-terrorism-modi/">இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது &#8211;  மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில்</title>
		<link>https://oruvan.com/vijays-election-campaign-in-tirunelveli-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 05:11:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[TIRUNELVELI]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48072</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலியில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கே.டி.சி நகர் பகுதியில் அவர் பிரசாரம் செய்யவுள்ளார். பாதுகாப்பு கருதி, 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vijays-election-campaign-in-tirunelveli-tomorrow/">விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலியில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கே.டி.சி நகர் பகுதியில் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.</p>
<p>பாதுகாப்பு கருதி, 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vijays-election-campaign-in-tirunelveli-tomorrow/">விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்</title>
		<link>https://oruvan.com/the-rice-harvest-festival-used-by-kings-in-india-a-thousand-years-ago-is-held-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Mar 2026 08:57:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47330</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் &#8211; வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-rice-harvest-festival-used-by-kings-in-india-a-thousand-years-ago-is-held-in-jaffna/">இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் &#8211; வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது.</p>
<p>அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான பயறு விதைக்கப்பட்டது.</p>
<p>பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். இந்திய துணை தூதரகத்தால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.</p>
<p>கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>மேற்குறித்த நெல்லினங்கள் முதல் தடவையாக இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-rice-harvest-festival-used-by-kings-in-india-a-thousand-years-ago-is-held-in-jaffna/">இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு</title>
		<link>https://oruvan.com/uducherry-2-seats-allotted-to-neyam-makkal-kazhagam-in-alliance-with-thaweka/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 09:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[tamilnadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47284</guid>

					<description><![CDATA[<p>புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, &#8220;நேயம் மக்கள் கழகம்&#8221; நிறுவனத் தலைவர் நேரு (எ) [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/uducherry-2-seats-allotted-to-neyam-makkal-kazhagam-in-alliance-with-thaweka/">புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.</p>
<p>புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, &#8220;நேயம் மக்கள் கழகம்&#8221; நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி சட்டமன்ற உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கமைய, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் &#8220;உருளையன்பேட்டை&#8221; மற்றும் &#8220;தட்டாஞ்சாவடி&#8221; ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/uducherry-2-seats-allotted-to-neyam-makkal-kazhagam-in-alliance-with-thaweka/">புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</title>
		<link>https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 08:37:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<category><![CDATA[Strait of Hormuz]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46534</guid>

					<description><![CDATA[<p>இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே உள்ள ஈரானிய ஆதாரங்கள்அத்தகைய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/">இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், வெளியே உள்ள ஈரானிய ஆதாரங்கள்அத்தகைய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை.</p>
<p>மேலும், ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி, இந்திய வட்டாரம் பெயர் குறிப்பிட மறுத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்ற தாய்லாந்து கப்பல் நேற்று புதன்கிழமை ஹர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்கப்பட்டது.</p>
<p>இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்திருந்தது.</p>
<p>இந்த தாக்குதலை தொடர்ந்து வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காகக் கொள்ளப்படுவதை இந்தியா கண்டிக்கிறது&#8221; என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>&#8220;மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக&#8221; வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.</p>
<p>பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் போரை தொடங்கியதிலிருந்து, ஈரான் ஹர்முஸ் நீரிணை வழியாக பயணித்த 16 கப்பல்களைத் தாக்கியுள்ளது.</p>
<p>ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும், ஈரானின் தாக்குதல்கள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு 200 டொலராக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விலை அதிகரிப்பானது தற்போதைய விலையை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/will-iran-allow-indian-flagged-ships-to-pass-through-the-strait-of-hormuz/">இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தீவிரமடையும் போர் பதற்றம் &#8211; ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/indians-warned-to-leave-iran-immediately/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Feb 2026 09:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45598</guid>

					<description><![CDATA[<p>ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஐந்து மற்றும் பெப்ரவரி 14 ஆகிய திகதிகளில் இதேபோன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னணியில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பில், மாணவர்கள், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indians-warned-to-leave-iran-immediately/">தீவிரமடையும் போர் பதற்றம் &#8211; ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.</p>
<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த ஜனவரி ஐந்து மற்றும் பெப்ரவரி 14 ஆகிய திகதிகளில் இதேபோன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னணியில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>புதிய அறிவிப்பில், மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியரும் வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்க வேண்டும்.</p>
<p>ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் முன்னேற்றங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும்&#8221; என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் பயண ஆவணங்களை கையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indians-warned-to-leave-iran-immediately/">தீவிரமடையும் போர் பதற்றம் &#8211; ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு</title>
		<link>https://oruvan.com/indian-delegation-arrives-to-bring-back-sacred-relics-of-lord-buddha/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 11:19:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44773</guid>

					<description><![CDATA[<p>புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் இன்று (09) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் 11 ஆம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-delegation-arrives-to-bring-back-sacred-relics-of-lord-buddha/">புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.</p>
<p>வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் இன்று (09) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p>
<p>அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி தெவ்னிமோரி புனித சின்னங்களை இந்தத் தூதுக்குழு இந்தியாவுக்கு கொண்டு செல்லவுள்ளது.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தெவ்னிமோரி புனித சின்னங்கள் கடந்த நான்காம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.</p>
<p>பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணி நேரமும் புனித சின்னங்களை வழிபட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை.</p>
<p>முதன்முறையாக, இலங்கை மக்கள் இந்தப் புனிதச்சின்னங்களைத் தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது சிறப்புக்குரியது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-delegation-arrives-to-bring-back-sacred-relics-of-lord-buddha/">புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு</title>
		<link>https://oruvan.com/no-attack-on-sri-lankan-fishermen-india-denies/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 05:56:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44524</guid>

					<description><![CDATA[<p>இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை மீனவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி இந்திய கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இலங்கை மீனவர்கள் சிலர் கரைக்கு திரும்பிய நிலையில் தெரிவித்திருந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/no-attack-on-sri-lankan-fishermen-india-denies/">இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை மீனவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.</p>
<p>இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 29 ஆம் திகதி இந்திய கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இலங்கை மீனவர்கள் சிலர் கரைக்கு திரும்பிய நிலையில் தெரிவித்திருந்தனர்.</p>
<p>அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச மக்களினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>இது குறித்து உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.</p>
<p>மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.</p>
<p>இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/no-attack-on-sri-lankan-fishermen-india-denies/">இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்</title>
		<link>https://oruvan.com/807-people-went-missing-in-delhi-in-the-first-15-days-of-january/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 03:55:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[New Delhi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44509</guid>

					<description><![CDATA[<p>இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, மாயம் ஆனவர்களில் 509 பேர் பெண்கள். இதில் 146 சிறுமிகளும், 45 சிறுவர்களும் அடங்குவர். தற்போதுவரை 181 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 435 பேரைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/807-people-went-missing-in-delhi-in-the-first-15-days-of-january/">டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது.</p>
<p>டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, மாயம் ஆனவர்களில் 509 பேர் பெண்கள். இதில் 146 சிறுமிகளும், 45 சிறுவர்களும் அடங்குவர்.</p>
<p>தற்போதுவரை 181 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 435 பேரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.3 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/807-people-went-missing-in-delhi-in-the-first-15-days-of-january/">டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/dont-ignore-the-risk-of-nipah-virus-medical-expert-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 08:22:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Nipha Virus]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44047</guid>

					<description><![CDATA[<p>இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றம் மற்றும் நுழைவுப் பகுதிகளில் அதிகரித்த விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைத்தார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-ignore-the-risk-of-nipah-virus-medical-expert-warns/">நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றம் மற்றும் நுழைவுப் பகுதிகளில் அதிகரித்த விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துரைத்தார்.</p>
<p>இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவுப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள், இரத்தம் தொடர்பான சுகாதார ஆலோசனை மற்றும் பொருத்தமான இடங்களில் தடுப்பூசி தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.</p>
<p>நிபா வைரஸ் என்பது வௌவால்களால் முக்கியமாகப் பரவும் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும், மேலும் இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடும்.</p>
<p>இலங்கையில் இதுவரை எந்த நோயாளர்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், வைரஸின் பரவல் தொடர்பில் தீவர கவனம் தேவை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நிபா வைரஸ் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.</p>
<p>காய்ச்சல், உடல் வலி, தசை வலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும், அதே நேரத்தில் கடுமையான நேரங்களில் மூளை வீக்கம் ஏற்படலாம் எனவும் இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>வௌவால்களின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது மலம் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு, அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது மற்றும் பன்றிகள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக அறியப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், நோய் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்படும் வரை காத்திருக்கக்கூடாது என்று வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களும், மாசுபட்ட உணவை உட்கொள்பவர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.</p>
<p>அதே நேரத்தில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்க முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-ignore-the-risk-of-nipah-virus-medical-expert-warns/">நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
