<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ganemulla Sanjeewa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ganemulla-sanjeewa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ganemulla-sanjeewa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 04 Nov 2025 03:21:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Ganemulla Sanjeewa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ganemulla-sanjeewa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</title>
		<link>https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 03:20:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Kehelpatara]]></category>
		<category><![CDATA[இஷாரா செவ்வந்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37216</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு &#8211; புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/">கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களின் திட்டத்தின்படி, நடத்தப்பட்டுள்ளதாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஷா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு &#8211; புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார், மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய இராஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.</p>
<p>இந்தக் கொலை கெஹல்பத்த பத்மேவால் திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளன, மேலும் இஷாரா செவ்வந்தியும் இந்தக் கொலை தொடர்பான பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>கெஹல்பத்த பத்மே, கமாண்டோ சாலிந்த, தரூன், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்கைப் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய இஷாராவின் மாமா பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.</p>
<p>அதன்படி, அவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/five-people-planned-the-murder-of-ganemulla-sanjeeva/">கணேமுல்ல சஞ்சீவவின் கொலையை திட்டமிட்ட ஐவர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/sri-lanka-has-witnessed-a-spike-in-gun-violence-since-the-start-of-2025-with-police-reporting-27-shooting-incidents/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Mar 2025 07:55:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15565</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் பொதுமக்கள், குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் மற்றும் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெப்ரவரி 19ஆம் திகதி மித்தெனியாவில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-has-witnessed-a-spike-in-gun-violence-since-the-start-of-2025-with-police-reporting-27-shooting-incidents/">நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p>
<p>உயிரிழந்தவர்களில் பொதுமக்கள், குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் மற்றும் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>பெப்ரவரி 19ஆம் திகதி மித்தெனியாவில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்ட சம்பவம், மற்றும் கொழும்பு புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் இதில் முக்கியமானதாகும்.</p>
<p>ஜனவரி முதல் இதுவரை நாட்டில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்</p>
<p>ஜனவரி 4 &#8211; வெலிகம பொலிஸ் பிரிவின் கப்பரத்தொட்ட பகுதியில் ஐந்து பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுன், இதில் 26 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.</p>
<p>ஜனவரி 07 &#8211; கல்கிஸ்ஸை, வட்டாரப்பால பகுதியில்அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 36 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>ஜனவரி 09 &#8211; அஹுங்கல்ல பகுதியிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதுடன், இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.<br />
சுடப்பட்ட நபர் லோகு பாட்டி என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் உறவினர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்</p>
<p>ஜனவரி 13 &#8211; தெவிநுவர பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p>
<p>ஜனவரி 15 &#8211; தொடங்கொட, வில்பத பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p>
<p>ஜனவரி 16 &#8211; மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>அதே நாளில், கொஹுவல காவல் பிரிவின் களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p>
<p>ஜனவரி 19 &#8211; கல்கிசை சிறிபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 24 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர். கொலை நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறிக்கொள்ளும் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.</p>
<p>ஜனவரி 22 &#8211; அம்பலந்தோட்டை கோக்கல பகுதியில் காரில் வந்த ஒரு குழு, துப்பாக்கிச் சூடு நடத்தியது. எனினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p>
<p>ஜனவரி 31 &#8211; காலி, ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>பெப்ரவரி 07 &#8211; மினுவங்கொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.</p>
<p>பெப்ரவரி 10 &#8211; கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p>
<p>பெப்ரவரி 19 &#8211; மித்தேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கொள்ளப்பட்டனர். தந்தை ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p>
<p>இதற்கிடையில், அதே நாளில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவும் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பூசா சிறைச்சாலையிலிருந்துஅழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p>
<p>இந்த துப்பாக்கிச் சூடு ஒரு சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரால் நடத்தப்பட்டதுடன், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>பெப்ரவரி 21 &#8211; ஜா எல பமுனுகமவில் உள்ள மோர்கன்வத்தே கடற்கரையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், அதே நாளில், கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.</p>
<p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, அதே நாளில் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து அந்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். பின்னர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டனர்.</p>
<p>பெப்ரவரி 26 &#8211; மினுவங்கொடை பட்டதுவன சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>மார்ச் 08 &#8211; கம்பஹாவின் அகராவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p>
<p>மார்ச் 13 &#8211; பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர், காலி, அக்மீமன, தலகல பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p>
<p>இதற்கிடையில், அதே நாளில், வெலிவேரியவில் உள்ள அரலியகஸ்தேக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.</p>
<p>மார்ச் 14 &#8211; அம்பலங்கொடை இடம்தோட்டை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் &#8216;பொடி சுத்தா&#8217; என்ற 39 வயதுடைய அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.</p>
<p>மார்ச் 17 &#8211; மிதிகம &#8211; பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநாள் மாலையில், கிராண்ட்பாஸ் நாகலம் தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மார்ச் 22 -தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-has-witnessed-a-spike-in-gun-violence-since-the-start-of-2025-with-police-reporting-27-shooting-incidents/">நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 03:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandhu Tennakoon]]></category>
		<category><![CDATA[Deshabandhu Thennakoon]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14981</guid>

					<description><![CDATA[<p>கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/">தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.</p>
<p>2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், நேற்று (18) மதியம், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கிழக்கு, ஹோகந்தரவில் உள்ள தேசபந்துவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.</p>
<p>சோதனையின் போது, ​​120 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடிக்கப்படதாக தெரிவிக்னகப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் அவற்றைப் பட்டியலிடும் பணியும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி தொடர்பிலும் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாகி ஒரு மாதம் ஆகின்றது. இந்நிலையில், தேசபந்து தென்னகோன், இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>
<p>இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிப்புமிக்கது என்றும், தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.</p>
<p>இந்த சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandu-ranaweera-and-sewwandi-still-missing-please-inform-if-you-have-any-information/">தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு &#8211; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் &#8211; இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?</title>
		<link>https://oruvan.com/police-seek-public-help-to-arrest-ganemulla-sanjeewa-murder-case-did-ishara-sewwandi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 05:47:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Aluthkade Courts Complex]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14687</guid>

					<description><![CDATA[<p>பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு &#8211; புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து தென்னிலங்கை சிங்கள் ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவரால் அவர் கடல் வழியாக மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-seek-public-help-to-arrest-ganemulla-sanjeewa-murder-case-did-ishara-sewwandi/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் &#8211; இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு &#8211; புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.</p>
<p>இது குறித்து தென்னிலங்கை சிங்கள் ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>வெளிநாட்டில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவரால் அவர் கடல் வழியாக மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது.</p>
<p>எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்குப் பின்னர், அவரைத் தேடி நாடு முழுவதும் ஏராளமான பொலிஸ் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.</p>
<p>எனினும், அவரை இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இஷாரா செவ்வந்தி குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் எனவே அவரைக் கைது செய்வதற்கு வசதியாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே இந்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p>
<p>கடந்த பெப்வரி மாதம் 19ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>
<p>சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். எனினும், விரைந்து செயற்பட்ட பொலிஸார் பிரதான் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.</p>
<p>எனினும், சந்தேகநபருக்கு துப்பாக்கியை புத்தகம் ஒன்றுக்குள் மறைத்து வைத்து நீமன்றிற்கு கொண்டு வந்து கொடுத்த இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை இதுவரை கைது செய்யமுடியவில்லை.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-seek-public-help-to-arrest-ganemulla-sanjeewa-murder-case-did-ishara-sewwandi/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் &#8211; இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</title>
		<link>https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Mar 2025 06:56:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[இஷார செவ்வந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13976</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அடைக்கப்பட்டன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/">இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இந்த படுகொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அடைக்கப்பட்டன.</p>
<p>அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.&#8221; புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றன.</p>
<p>இதுபோன்ற சம்பவம் நிகழும்போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. விசாரணைகளைத் திசைதிருப்ப குற்றவாளிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது சாத்தியமாகும்.</p>
<p>&#8220;இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் இன்னும் தீவிரமாக செயற்படுவதாக.&#8221; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் பிராதான சந்தேகநபர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-did-not-escape-to-india/">இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை &#8211; பொலிஸ் பேச்சாளர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</title>
		<link>https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Mar 2025 12:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13913</guid>

					<description><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக &#8216;திவயின&#8217; செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபரான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/">இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக &#8216;திவயின&#8217; செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி களுத்துறை பகுதிக்குச் சென்று ஒரு தங்க நகைக் கடையிலிருந்து சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றார்.</p>
<p>எனினும், அதன் பின்னர் சந்தேகநபர் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p>
<p>சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/did-ishara-chevwanthi-flee-the-country/">இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</title>
		<link>https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 05:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13097</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
<p>இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p>இந்நிலையில், கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மினுவாங்கொட பகுதியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-all-cctv-footage-of-the-court-premises-handed-over-to-the-police/">கணேமுல்ல சஞ்சீவ படுகொலை &#8211; நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</title>
		<link>https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 06:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[இஷார செவ்வந்தி]]></category>
		<category><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12570</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/">செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.</p>
<p>தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார்.</p>
<p>இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள உலகத் தலைவர்களையும், கொலையை திட்டமிட்டவர்களையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p>
<p>சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முடியவில்லை என்றும், அவர் இந்த நாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு வருவதாகவும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.</p>
<p>துபாயில் இருந்து கொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்தப் பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் எவ்வாறு நட்பாக இருந்து கொலையைத் திட்டமிட்டார் என்பது குறித்து பொலிஸ் விசாரணைகள் மூலம் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நபர் ஐஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது கொலைக்கான துப்பாக்கிச் சூடு நடத்துபவராக அவருக்கு பயிற்சி அளிப்பதை எளிதாக்கியதாகவும் சுனில் வட்டகல கூறுகிறார்.</p>
<p>இந்தக் கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் குறித்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>துபாயில் இருந்து திட்டமிடப்பட்ட குற்றவியல் கொலைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு மற்றும் அவர்கள் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்களா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/11-police-teams-to-arrest-ishara-sewwandi-ministry-of-defense-information/">செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 02:59:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa Murder]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11831</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/">செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இருப்பினும், அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மதுகமவின் பல இடங்களில் நேற்று ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இருப்பினும், பெண் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மூன்று சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கொலைக்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதை வழங்கியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி நீண்ட விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார், மேலும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் கமாண்டோக்கள் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-special-operation-is-underway-across-the-country-in-search-of-the-ishara-sewwandi/">செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு &#8211; மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி</title>
		<link>https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-case-permission-granted-to-detain-and-interrogate-three-people/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 15:53:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeeva murder]]></category>
		<category><![CDATA[Ganemulla Sanjeewa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11814</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த கூடுதல் நீதவான், சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார். கொலைக்குப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-case-permission-granted-to-detain-and-interrogate-three-people/">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு &#8211; மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த கூடுதல் நீதவான், சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.</p>
<p>கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை, கொலைக்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதை வழங்கியமை, துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியையும் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>சந்தேக நபர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவர்.</p>
<p>அவர்கள் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும், அஸ்கிரியின் வல்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.</p>
<p>விசாரணையில் அவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்றும், வந்த முச்சக்கர வண்டியும் அந்த நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.</p>
<p>மேலும் விசாரணையின் போது, ​​துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முச்சக்கர வண்டியை  கொச்சிக்கடை-ரிதிவெல்ல சாலைக்கு எடுத்துச் சென்று, தன்னிடம் இருந்த ஒரு சூட்கேஸை முச்சக்கர வண்டியிலிருந்து வெளியே எறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞன் 22 வயதுடையவர் என்பதுடன் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி நீண்ட விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார், மேலும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ganemulla-sanjeeva-murder-case-permission-granted-to-detain-and-interrogate-three-people/">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு &#8211; மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
